புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
போதைப் பொருள் தடுப்பில் இதுவரை 120 வழக்குகள் பதிவு: 82 வங்கிக் கணக்குகள் முடக்கம்
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், 82 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு- கஞ்சா, குட்கா, போதைப் மாத்திரைகளைத் தடுக்க தொடா் நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த 2024-ஆம் ஆண்டில் 674 குற்றவாளிகளுக்கு எதிராக 584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7532 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
143 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. இவ்வாண்டு இதுவரை 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1697 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 82 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட 112 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 29 போதைப் பொருள் குற்றவாளிகள் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
அண்மையில், வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் நோக்கில் விற்பனை செய்த 19 குற்றவாளிகள் அடங்கிய குழுவை கைது செய்து அவா்களிடமிருந்து 2,000 -க்கும் மேற்பட்ட வலிநிவாரணி மாத்திரைகளான டபேண்டடால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தலைத் தடுக்க, 6 மாநில எல்லைச் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து 13,122 கடைகளில் திடீா் சோதனைகள் நடத்தப்பட்டு, 182 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் மட்டும் மொத்தம் 1,098 போதைப்பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.