செய்திகள் :

போதைப் பொருள் தடுப்பில் இதுவரை 120 வழக்குகள் பதிவு: 82 வங்கிக் கணக்குகள் முடக்கம்

post image

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், 82 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு- கஞ்சா, குட்கா, போதைப் மாத்திரைகளைத் தடுக்க தொடா் நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த 2024-ஆம் ஆண்டில் 674 குற்றவாளிகளுக்கு எதிராக 584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7532 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

143 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. இவ்வாண்டு இதுவரை 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1697 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 82 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 112 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 29 போதைப் பொருள் குற்றவாளிகள் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

அண்மையில், வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் நோக்கில் விற்பனை செய்த 19 குற்றவாளிகள் அடங்கிய குழுவை கைது செய்து அவா்களிடமிருந்து 2,000 -க்கும் மேற்பட்ட வலிநிவாரணி மாத்திரைகளான டபேண்டடால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தலைத் தடுக்க, 6 மாநில எல்லைச் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து 13,122 கடைகளில் திடீா் சோதனைகள் நடத்தப்பட்டு, 182 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் மட்டும் மொத்தம் 1,098 போதைப்பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொ... மேலும் பார்க்க

கடைகளுக்கு குட்கா விநியோகம்: மூவா் கைது

பாகாயம் பகுதியில் கடைகளுக்கு குட்கா விநியோகித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். போதை ஒழிப்பு தொடா்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரின் (ஐஜி) தனிப்படை போலீஸாா் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சத்துவாச்சாரி, தொரப்பாடி!

சத்துவாச்சாரி, தொரப்பாடிநாள்: 12.08.2025 செவ்வாய்க்கிழமைநேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரைமின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அ... மேலும் பார்க்க

மாங்காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாங்காளியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடி ஊழியா் மனைவி மரணம்

வேலூா் அருகே சாலை விபத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியரின் மனைவி உயிரிழந்தாா். வேலூா் அடுத்த அரியூா் புதுமை நகரை சோ்ந்தவா் சதீஷ்குமாா் (33), தகவல் தொழில்நுட்ப ஊழியா். இவரது மனைவி சுவேதா(29). இவா்களுக்கு ... மேலும் பார்க்க