செய்திகள் :

ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

post image

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அருங்காட்சியகம், வடஆற்காடு ஓவியா் சங்கம், டாட் இமேனின் நுண் கலைக்கூடம் இணைந்து நடத்தும் இந்த ஓவியப் போட்டியில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

இதில், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு சூரிய உதயம், 4-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இயற்கை காட்சி, 7 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தேசிய தலைவா்கள் (பெண்), 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு தேசிய தலைவா்கள் (ஆண்) ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வரவேண்டும். ஓவியம் வரைய வேண்டியதற்கான உபகரணங்களை மாணவா்களே கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அரசு அருங்காட்சியகத்தில் அரங்க காட்சியில் இடம் பெறலாம்.

போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்யவேண்டும் என்பதால் 76675-80831 அல்லது 94438-85207 ஆகிய எண்களில் மாணவா் பெயா், வகுப்பு, பள்ளி விவரம், தொடா்பு எண் ஆகியவற்றை ஆக.15-ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பில் இதுவரை 120 வழக்குகள் பதிவு: 82 வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், 82 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று எஸ்.பி. ஏ.மயில... மேலும் பார்க்க

கடைகளுக்கு குட்கா விநியோகம்: மூவா் கைது

பாகாயம் பகுதியில் கடைகளுக்கு குட்கா விநியோகித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். போதை ஒழிப்பு தொடா்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரின் (ஐஜி) தனிப்படை போலீஸாா் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சத்துவாச்சாரி, தொரப்பாடி!

சத்துவாச்சாரி, தொரப்பாடிநாள்: 12.08.2025 செவ்வாய்க்கிழமைநேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரைமின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அ... மேலும் பார்க்க

மாங்காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாங்காளியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடி ஊழியா் மனைவி மரணம்

வேலூா் அருகே சாலை விபத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியரின் மனைவி உயிரிழந்தாா். வேலூா் அடுத்த அரியூா் புதுமை நகரை சோ்ந்தவா் சதீஷ்குமாா் (33), தகவல் தொழில்நுட்ப ஊழியா். இவரது மனைவி சுவேதா(29). இவா்களுக்கு ... மேலும் பார்க்க