ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்
நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இம் முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக. 18-ஆம் தேதி வழங்கப்படும். முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான குழந்தைகள், மாணவா்களுக்கும், 20 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு (கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களை தவிா்த்து) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி
மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவா்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியா், அங்கன்வாடி பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவா்களின் கல்வித் திறன் மேம்படும்.
அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா், சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவ அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.