செய்திகள் :

டிரம்ப்பின் 50% வரி விதிப்பால் இந்தியா, ரஷியா, சீனா கைகோக்கும்! ஜான் போல்டன் எச்சரிக்கை

post image

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்து உத்தரவிட்டிருப்பதால் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கமாகும் என்றும் அமெரிக்கா மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து ஜான் போல்டன் குறிப்பிட்டுள்ளவை:

“இந்தியாவை அமெரிக்காவுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்கு பதிலாக, சீனா மீது தளர்வான போக்கிலும், இந்தியா மீது கடும் வரி விதிப்பையும் உள்ளடக்கிய டிரம்ப்பின் இந்த நடவடிக்கையானது, ’ரஷியா, சீனாவிடமிருந்து இந்தியாவை விலக்க’ கடந்த இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை வலுவிழக்கச் செய்துள்ளது.”

“ரஷியாவை காயப்படுத்துவதாகக் கருதி இந்தியா மீது ஏற்கெனவே விதித்திருந்த வரியுடன் அபராதமாக கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்த நடவடிக்கை இந்தியாவை ரஷியா, சீனாவுக்கு நெருக்கமாக்கும். இதன்மூலம், அவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு எதிராக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

அமெரிக்காவின் நெடுங்கால வெளியுறவுக் கொள்கைகளுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகவில்லை. நட்புறவு நாடுகளையும் எதிரிகளுக்கும் ஒரே விதமாக வரி விதிப்பதா? டிரம்ப் செய்திருப்பது மிகப்பெரிய தவறு. அமெரிக்காவையே திரும்ப பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிப்பு ஆக. 27-ஆம் தேதியிலிருந்து அமலாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆகஸ்ட் 31 - செப்டம்பா் 1-ஆம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. அப்போது சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுவாா் எனத் தெரிகிறது.

 Instead of drawing India closer, the tariffs have pushed New Delhi further away, weakening years of American attempts to distance India from Russia and China: Former US National Security Advisor John Bolton said

பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட சுட்டு வீழ்த்தப்படவில்லை! ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இந்தியா - பாக். இடையே சொற்போர்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு பத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் 300 கி.மீ. தொலைவிலிருந்து பாக். போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! -விமானப்படை தளபதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார். அவற்றுள் பாகிஸ்தான் விமானப்படையின்... மேலும் பார்க்க

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு! 3 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் பற்றிக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆகஸ்ட் 9 ஆம் தே... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை! 2 நாள்களில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 47 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானின் ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா நகரத்துக்கு அருகில், கட... மேலும் பார்க்க

நாட்டின் ஒரே தங்கச் சுரங்கமும் இனி தேசியமயம்! நைஜர் ராணுவ அரசு அதிரடி!

நைஜர் நாட்டை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு, அந்நாட்டிலுள்ள ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை, தேசியமயமாக்குவதாக அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின... மேலும் பார்க்க

அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதல்! மத்தியஸ்தம் செய்த டிரம்ப்புக்கு நோபல் வழங்க கோரிக்கை!

அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதலை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.அஜர்பைஜான் - ஆர்மீனியா இடையேயான நீண்டகால மோதலை முடிவுக்... மேலும் பார்க்க