செய்திகள் :

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

post image

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். ஒரு சாதியை வைத்து மட்டும் அரசியல் நடத்துவது என்பது இயலாத காரியம். எம்.ஜி.ஆர்., ஆனாலும், ஜெயலலிதா ஆனாலும் மற்றும் அவர்கள் மறைவுக்கு பிறகும் அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதத்திற்கு அப்பார்பட்ட கட்சி. அதிமுகவில் எவ்வளவு சாதி சங்கங்கள், எவ்வளவு மதத்தை சேர்ந்தவர்கள் எங்களது இயக்கத்தில் இருக்கின்றனர் தெரியுமா.

எடப்பாடி பழனிசாமி

நாங்கள் ஒற்றுமையாக செயல்படுகிறோம். சில பேருக்கு அது பொறுக்கவில்லை, எரிச்சல், வெறுப்பின் வெளிப்பாடு தான் இப்படிப்பட்ட வார்த்தையை கக்கிக் கொண்டிருக்கின்றனர். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது. இன்னும் 8 மாதத்தில் கூட்டணி நிலைக்குமா நிலைக்காதா என்பது குறித்து செய்தியாளர்கள் பேச்சிலேயே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. அந்த 8 மாதத்தில் சிறப்பான கூட்டணி அமையும். அப்போது அனைவருக்கும் தெரிவிப்போம்" என்றார்.

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க

ட்ரம்ப் - புதின் சந்திப்பு: உக்ரைன் நிலங்களை விட்டுக்கொடுக்க வேண்டுமா? - எதிர்க்கும் ஜெலன்ஸ்கி!

விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், உக்ரைனின் தலையீடு இல்லாமல் அமைதி ஒப்பந்தங்கள் ஏ... மேலும் பார்க்க

PMK: ``பதவிகளுக்கு ஆசைப்படாத நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்" - அன்புமணி

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் தனித் தனியே பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என அ... மேலும் பார்க்க

`2026 தேர்தலுக்கு அதிமுக-வின் அற்புதமான தேர்தல் அறிக்கை...' - சேலத்தில் இபிஎஸ் பேச்சு!

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுகவில் உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "2021க்கு முன்பு சேலம் ம... மேலும் பார்க்க