செய்திகள் :

`2026 தேர்தலுக்கு அதிமுக-வின் அற்புதமான தேர்தல் அறிக்கை...' - சேலத்தில் இபிஎஸ் பேச்சு!

post image

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுகவில் உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "2021க்கு முன்பு சேலம் மாவட்டம் எப்படி இருந்தது என்று ஒப்பிட்டுப் பாருங்கள். அனைத்து அடிப்படை வசதிகளும் திட்டங்களும் செய்து கொடுத்தோம். ஏரிகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பினோம். விவசாயிகள் வாங்கிய பயிர்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். கைத்தறி, விசைத்தறி நிறைந்த இந்த பகுதி அதிமுக ஆட்சியில் செழிப்பாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியின் நிர்வாக திறனற்ற காரணத்தால் இந்த இரண்டு தொழில்களும் நலிந்து விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்கள் மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கான பிரீமியம் அரசே செலுத்தும். மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு அனைத்து உபகரணங்களும் அரசே வழங்கும்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் உள்ள 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்து 6 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவந்தோம். திமுக ஆட்சியில் இந்த திட்டம் மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 ஏரிகளும் நிரப்புவோம். தற்போது மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் கடலில் கலந்து வருகிறது. இந்த ஆட்சியாளர்கள் நினைத்து இருந்தால் எப்போதோ இந்த திட்டத்தை முடித்திருக்கலாம். அதிமுக ஆட்சியிலேயே 75 சதவீத பணிகள் முடிவுற்றது. 25 சதவீத பணிகள் இன்னும் இந்த ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் வழங்கப்படும். ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசு வீடு கட்டி தரும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டி தரும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அது அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைக்கக்கூடிய அற்புதமான தேர்தல் அறிக்கையாக அமையும்" என்று பேசினார்.

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க