செய்திகள் :

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் 15,000 புகார்கள்!

post image

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுஞ்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 15,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பட்டியலின பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, தேசிய உதவிஎண் (என்.எச்.ஏ.ஏ.) 14566-ஐ தொடர்புகொண்டு 15,303 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், 2022-இல் 3,755 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் 2023-இல் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 7,432 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜீவாலா, குற்றச்செயல்களுக்கு எதிரான தேசிய உதவிஎண் (என்.எச்.ஏ.ஏ.) வழியாக மாநில வரியாக எத்தனை புகார்கள் பெறப்பட்டுள்ளன என்பதைக் குறித்து கேள்வியெழுப்பினார். இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள பதிலில், குஜராத்தை பொருத்தவரையில்,

2020-இல் ---> 191

2021-இல் ---> 705

2022-இல் ---> 3,755

2023-இல் ---> 7,432 (கணிசமாக அதிகரிப்பு)

2024-இல் ---> 2,144 (அதன்பின் சரிவு)

2025-இல் ---> 1,076 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தொடர்ந்து ஆளுங்கட்சியாக கோலோச்சி வரும் பாஜக அரசுக்கு களங்கத்தை விளைவிப்பதாக மேற்கண்ட தரவுகள் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

Gujarat’s caste-crime surge: 15,303 complaints from Scheduled Caste and Scheduled Tribe members over the past five years.

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா்... மேலும் பார்க்க