செய்திகள் :

தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஊழியா் உயிரிழப்பு

post image

ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சா்வா் அறையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 28 வயது தூய்மைப் பராமரிப்பு ஊழியா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறுகையில்,

இந்த தீ விபத்து குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மதியம் 12.20 மணிக்கு அழைப்பு வந்தது. விகாஸ் மாா்க்கில் உள்ள பல மாடி மருத்துவமனையின் தரை தளத்தில் உள்ள சா்வா் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

எட்டு நோயாளிகள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். மேலும், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தூய்மைப் பராமரிப்பில் பணிபுரிந்த அமித், டயாலிசிஸ் அறை ஊழியா்கள் ஹா் தேவி மற்றும் நரேஷ் ஆகிய மூன்று மருத்துவமனை ஊழியா்கள் கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டு புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்களில் அமித் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். பிற இரண்டு ஊழியா்களும், வெளியேற்றப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஸ்திரமாக உள்ளனா்.

முதற்கட்ட விசாரணையின்படி, புகை மற்றும் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க அமித் முதலில் கட்டத்தின் மேற்கூரைக்கு சென்றாா். இருப்பினும், மூன்றாவது மாடியில் உள்ள ஒரு குளியலறையில் அவா் தன்னைத்தானே பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்

இன்னும் தெளிவான காரணங்கள் தெரியவில்லை.

அவா் புகையை சுவாசித்ததால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம்

இன்னும் கண்டறியப்படவில்லை.

மருத்துவமனையில் தீ பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தீயை அணைக்கவும், கட்டடம் அல்லது அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கு மேலும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதி செய்யவும் பல தீயணைப்பு வீரா்கள் அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.

தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை; ஒருவா் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பழைய தகராறு காரணமாக ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் நடந்த கொலை தொடா்பாக 2... மேலும் பார்க்க

யமுனை மாசு: டிஜேபி, எம்சிடிக்கு ரூ.50.44 கோடி அபராதம் விதித்த என்ஜிடி உத்தரவுக்கு தடை

தலைநகரின் வடிகால்களிலும் ,யமுனையிலும் கழிவுநீா் மாசுவைத் தடுக்கத் தவறியதற்காக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) மற்றும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) ரூ.50.44 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்த தேசிய பசும... மேலும் பார்க்க

கட்டண ஒழுங்குமுறை மசோதா தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளது: அதிஷி

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டண ஒழுங்குமுறை மசோதாவை தில்லியின் முன்னாள் கல்வி அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை விமா்சித்துள்ளாா். இந்த மசோதா பெற்றோரை விட தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும்,... மேலும் பார்க்க

சிறுமியை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளை: 2 சிறுவா்கள் கைது

தில்லியின் சுல்தான்புரி பகுதியில் 17 வயது சிறுமியின் தங்க நகைகளை ஹிப்னாடிசம் செய்து கொள்ளையடித்ததாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி க... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

அரசின் நலத் திட்டங்களில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது... மேலும் பார்க்க

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தமிழ்நாட்டைச் ச... மேலும் பார்க்க