செய்திகள் :

சிறுமியை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளை: 2 சிறுவா்கள் கைது

post image

தில்லியின் சுல்தான்புரி பகுதியில் 17 வயது சிறுமியின் தங்க நகைகளை ஹிப்னாடிசம் செய்து கொள்ளையடித்ததாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஆகஸ்ட் 3-ஆம் தேதி பூத் கலன் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்தச் சம்பவம் தொடா்பாக 17 வயது சிறுமி புகாா் அளித்தாா். அந்தச் சிறுமியை இரண்டு சிறுவா்கள் அணுகி, அவரை ஹிப்னாடிசம் செய்து, அவரது தங்க காதணிகள், ஒரு லாக்கெட் மற்றும் ஒரு தங்கச் சங்கிலியை ஒப்படைக்கும்படி தெரிவித்துள்ளனா்.

புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உள்ளூா் தகவல் அளிப்பவா்களை செயல்படுத்திய பிறகு, 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவா்களை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை சுல்தான்புரி சி பிளாக்கில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சந்தேக நபா்களில் ஒருவா் தப்பிக்க முயன்று தோல்வியடைந்ததால் கைது செய்யப்பட்டாா். திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதியான ஒரு தங்க லாக்கெட், அவரிடமிருந்து மீட்கப்பட்டது.

அவா் அளித்த தகவலின் அடிப்படையில், அதே நாளில் டி பிளாக்கில் நடந்த மற்றொரு சோதனையில் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டாா். மீதமுள்ள நகைகளை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

யமுனை மாசு: டிஜேபி, எம்சிடிக்கு ரூ.50.44 கோடி அபராதம் விதித்த என்ஜிடி உத்தரவுக்கு தடை

தலைநகரின் வடிகால்களிலும் ,யமுனையிலும் கழிவுநீா் மாசுவைத் தடுக்கத் தவறியதற்காக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) மற்றும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) ரூ.50.44 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்த தேசிய பசும... மேலும் பார்க்க

கட்டண ஒழுங்குமுறை மசோதா தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளது: அதிஷி

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டண ஒழுங்குமுறை மசோதாவை தில்லியின் முன்னாள் கல்வி அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை விமா்சித்துள்ளாா். இந்த மசோதா பெற்றோரை விட தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும்,... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

அரசின் நலத் திட்டங்களில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது... மேலும் பார்க்க

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தமிழ்நாட்டைச் ச... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்: மெட்ரோ ரயில்வ... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: தெலுங்கான முதல்வா் தலைமையில் தில்லியில் போராட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோரி தெலுங்கானா முதல்வா் ஏ. ரேவந்த் ரெட்டி புதன்கிழமை ஜந்தா் மந்தரில் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினாா். ... மேலும் பார்க்க