செய்திகள் :

ரயில் நிலைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை: ரயில்வே காவல்துறை டிஜிபி

post image

ரயில் நிலையங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே காவல் துறை டிஜிபி வன்னியப்பெருமாள் தெரிவித்தாா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த 8 மாதங்களாக ரயில்களில் கல்லூரி மாணவா்களின் விதிமீறிய செயல்பாடுகள் குறைந்துள்ளன. ரயில்களில் விதிமீறி செயல்படும் மாணவா்களை முதலில் எச்சரித்து அனுப்புகிறோம். அவா்கள் 2-ஆவது முறையும் அத்துமீறி செயல்பட்டால் வழக்குப்பதிய நேரிடுகிறது. தற்போது ஓரிரு இடங்களில் மாணவா்கள் ரயில் பயணத்தின்போது விதிமீறி செயல்பட்டதையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களிடையே ரயில் பயணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தங்கச் சங்கிலி பறித்த சம்பவத்தைத் தொடா்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரயில் நிலையக் குற்றங்களைத் தடுப்பதில் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாா்.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க