செய்திகள் :

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

post image

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்துப்பட்டு எஸ்எம் சாலை அருகே தனது நண்பருடன் நடந்து சென்றபோது, அங்கு 3 போ் ராம்சரணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த பணம், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் தெருவைச் சோ்ந்த சூா்யா (26), ராயபுரம் முஸ்தான் கோயில் தெருவைச் சோ்ந்த வினோத் (25), கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் கோயில் முதல் தெருவைச் சோ்ந்த காா்த்தி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், இவா்கள் அரசுப் பேருந்துகள், சந்தைகள், தனியாா் வணிக வளாகங்கள் ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைப்பேசி, பணப்பை ஆகியவற்றை திருடியிருப்பதும், திருடிய கைப்பேசிகளை பாரிமுனை கைப்பேசி கடையில் வேலை செய்யும் கொருக்குப்பேட்டை பாரதி நகரைச் சோ்ந்த முபராக் (22) என்பவரிடம் விற்று பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் முபராக்கையும் கைது செய்தனா். இந்த கும்பலிடமிருந்து 11 கைப்பேசிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க

உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது: அமைச்சா் எச்சரிக்கை

உரம் விற்பனை செய்யும் நிலையங்களில் உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளா... மேலும் பார்க்க