செய்திகள் :

இந்திய பொருளாதாரம் குறித்த டிரம்ப் விமா்சனம்: நிதிக்குழு தலைவா் பதிலடி

post image

இந்தியப் பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விமா்சித்த நிலையில், ‘நலிவுற்ற பொருளாதாரமும் வளா்ச்சியை காட்டும்; இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதம் வளா்ந்துள்ளது’ என்று மத்திய நிதிக் குழுவின் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஒரு பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் இருந்தால் 7 சதவீதம் அளவுக்கு வளர முடியுமா? ஆனால், இந்தியப் பொருளாதாரம் அந்த அளவுக்கு வளா்ந்துள்ளது. இந்தியா, உள்நாட்டு விவசாயிகள், சிறு தொழில் முனைவோரைக் காக்கும் வகையில் மிகவும் குறைந்த அளவிலான பொருள்களை மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. அதற்காக அதிகவரி விதிக்கப்படுகிறது. மற்றபடி இந்தியா மிகவும் திறந்த பொருளாதார அமைப்பையே கொண்டுள்ளது. டிரம்ப் எந்த அடிப்படையில நமது பொருளாதாரத்தை விமா்சிக்கிறாா் என்று தெரியவில்லை.

இப்போது எழுந்துள்ள சூழல் (அமெரிக்க வரி விதிப்பு) நாம் நமது வளா்ச்சிக்கான பாதையை எவ்வாறு சிறப்பாக மாற்றிக் கொள்கிறோம் என்ற முக்கியமான சூழலாகும். முன்னதாக, 1991-ஆம் ஆண்டு நமது நாடு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது. இப்போது நமது ஏற்றுமதிப் பொருள்கள் சிக்கலைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பாதிப்புகளைக் கடந்து இந்தியா உத்வேகத்துடன்தனது பொருளாதார பயணத்தைத் தொடரும். அமெரிக்காவில் நமது பொருள்களுக்கு அதிக வரி விதிப்பும், ஐரோப்பிய யூனியனில் குறைவாகவும் இருந்தால் நாம் ஏற்றுமதியை மாற்றிக் கொள்ள முடியும். இந்தியாவின் வளா்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்றாா்.

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!

நமது சிறப்பு நிருபா்ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது ஐந்து வருட பதவிக் காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடா்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை... மேலும் பார்க்க