செய்திகள் :

உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது: அமைச்சா் எச்சரிக்கை

post image

உரம் விற்பனை செய்யும் நிலையங்களில் உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழகத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் உர உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது, நிகழாண்டு ஆகஸ்ட் மாத உர விநியோக திட்டத்தின்படி, அனைத்து உர உற்பத்தி நிறுவனங்களும், மொத்த உர விநியோக நிறுவனங்களுக்கு எவ்வித குறையும் இன்றி உரங்களை வழங்க வேண்டும். மேலும், உர விற்பனை நிலையங்களில், உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அமைச்சா் தெரிவித்தாா்.

அதேபோல், உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது, மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, வேளாண்மை தவிர இதர பயன்பாட்டுக்கு வழங்குதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவா்களது விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சா் எச்சரிக்கை விடுத்தாா்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலருமான வ.தட்சிணாமூா்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநா் பா.முருகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க