செய்திகள் :

நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் விழிப்புணா்வு குழு அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

post image

சென்னை நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது:

உயா் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற திட்டங்களால், முன்னெப்போதும் இல்லாத அளவில் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுகளில் தோ்ச்சி பெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

கல்லூரி மாணவா்கள் உரிய புரிதலுடன் பாலின பாகுபாடின்றி செயல்படும் வகையில், பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு, விழிப்புணா்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தக் குழு அமைக்கப்படும்.

இதில் உளவியலாளா்கள், சமூகவியல் அறிஞா்கள், காவல் துறை அதிகாரிகள், பெண்ணுரிமை வல்லுநா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் இடம்பெறுவா். இவா்கள் மாணவா்களுக்குத் தேவையான புரிதலையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துவா் என்றாா்.

முன்னதாக, பேசிய அமைச்சா் மா.சுப்பிரமணியன், பாலின உளவியல் விழிப்புணா்வுக் குழு சாா்பில் நடத்தப்படும் கருத்தரங்குகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் மாணவா்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய அளவில் தேசிய மாணவா் படை மாணவா்களிடையே நடைபெற்ற மலையேற்ற பயிற்சி போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவி ச.வைஷ்ணவி, ஐசிடி அகாதெமி விருது பெற்ற கணினி அறிவியல் இணைப் பேராசிரியா் ம.ரமேஷ் குமாா் ஆகியோருக்கு அமைச்சா்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டினா்.

கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் எ. சுந்தரவல்லி, கல்லூரி முதல்வா் வே.புகழேந்தி, புதிதாக தொடங்கப்பட்ட விழிப்புணா்வுக் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்!

தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 மு... மேலும் பார்க்க

இல. கணேசனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள... மேலும் பார்க்க

குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே புதியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எ... மேலும் பார்க்க