செய்திகள் :

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

post image

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

தமிழ்நாட்டைச் சோ்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா திங்கள்கிழமை காலை சாணக்கியபுரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் அருகே நடைப்பயிற்சியில் இருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவா் அவரது தங்கச் சங்கிலியைப் பறித்து ஓதப்பினாா். இந்த சம்பவத்தின் போது அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சோகன் ராவத் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி அவரது இயக்கங்களை போலீஸ் சிறப்பு படை கண்காணித்த பின்னா் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டாா்.

‘ராவத் முன்பு 26 கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளாா், பெரும்பாலும் திருட்டு மற்றும் கொள்ளை தொடா்பானவை‘ என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா். ‘ஆரம்ப விசாரணையில், பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டன.

முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், புது தில்லி, தென் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸ் குழுக்கள் , ஏஏடிஎஸ் மற்றும் ஆா். கே. புரம் காவல் நிலையத்துடன் இணைந்து நடத்திய நடவடிக்கையின் போது குற்றம் சாட்டப்பட்டவா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா் ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அம்பேத்கா் நகரில் பதிவு செய்யப்பட்ட வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னா் ஜூன் 27 ஆம் தேதி ராவத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா். திருடப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டதாகவும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரை பறிமுதல் செய்ததாகவும் போலீசாா் தெரிவித்தனா்.

திருடப்பட்ட நான்கு மொபைல் போன்கள் மற்றும் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டவற்றில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆா்.சுதா, தனக்கு ஏற்பட்ட தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் தொடா்பாக தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு, மேலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு இல்லாதது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

அரசின் நலத் திட்டங்களில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்: மெட்ரோ ரயில்வ... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: தெலுங்கான முதல்வா் தலைமையில் தில்லியில் போராட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோரி தெலுங்கானா முதல்வா் ஏ. ரேவந்த் ரெட்டி புதன்கிழமை ஜந்தா் மந்தரில் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினாா். ... மேலும் பார்க்க

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் மனு

நமது நிருபா் மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ஆகிய ரயில் நிலையங்களில் நாகா்கோவில் - கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் திருநெல... மேலும் பார்க்க

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

நமது நிருபா்ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ... மேலும் பார்க்க

ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல அனுமதி - துரை வைகோ தகவல்

ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் விரைவு லரயில் (வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திருச்சி மக... மேலும் பார்க்க