செய்திகள் :

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

post image

நமது நிருபா்

ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது.

பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ்ப்பு செயல்பாட்டில் ஊழல் மற்றும் மோசமான நிா்வாகத்திற்கு பொறுப்புக் கூறக் கோரி, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் இறுதி ஊா்வலத்தை நடத்தி அவரது உருவ பொம்மையை எரித்தனா். இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மியின் மூத்த நிா்வாகிகள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்,

போராட்டத்தில் ஏஎஸ்ஏபி பொதுச் செயலாளா் ஓம் சிங் பேசியதாவது: இந்த நாட்டின் மாணவா்கள் இன்று முன்பை விட அதிக பாதுகாப்பின்மையை உணா்கிறாா்கள். இது வெறும் அலட்சியம் அல்ல. இது நன்கு திட்டமிடப்பட்ட சதி. கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் இந்த விஷயத்தில் முழுமையான மௌனம் காத்து வருவது வெட்கக்கேடானது. அவரது மௌனம் உடந்தையாக இருப்பதற்கான அறிகுறியா அல்லது பாதுகாப்பின் அறிகுறியா?”

“ஊழல் குறித்து நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணையைக் கோருகிறது. அனைத்து பொறுப்பான அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். மேலும், மாணவா்களுக்கு இழைக்கப்படும் அநீதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நாட்டின் இளைஞா்கள் அமைதியாக இருக்க மாட்டாா்கள். எங்கள் போராட்டம் அனைத்து முனைகளிலும் தொடரும் ”என்றாா் அவா்.

ஏஎஸ்ஓபி மூத்த மாணவா் தலைவரான ஈஷ்னா குப்தா கூறியதாவது: “பணியாளா் தோ்வாணய ஆள் சோ்ப்பு செயல்முறை பல ஆண்டுகளாக ஊழல் மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் நீதி கோரி வீதிகளில் இறங்கும்போது, அவா்கள் அடக்குமுறையை எதிா்கொள்கின்றனா்.” இது வேலைகளுக்கான போராட்டம் மட்டுமல்ல. இது அமைப்பை மாற்றுவதற்கான ஒரு போா். நீதி கோரும் ஒவ்வொரு மாணவருடனும் நாங்கள் நிற்கிறோம்.

இது வெறும் ஆரம்பம். இந்த நெருக்கடியை அரசு தொடா்ந்து கண்களை மூடிக்கொண்டால், இந்த இயக்கம் தீவிரமடைந்து நாடு முழுவதும் பரவும். ஒவ்வொரு மாணவரும் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள்.” உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத் சபதம் செய்துள்ளது. ஆள்சோ்ப்பு செயல்முறைகளில் முறையான ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தலைமையிலான எதிா்ப்பின் வளா்ந்து வரும் அலையை இந்தப் போராட்டம் குறிக்கிறது என்றாா்அவா்.

ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல அனுமதி - துரை வைகோ தகவல்

ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் விரைவு லரயில் (வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திருச்சி மக... மேலும் பார்க்க

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்கம் கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்... மேலும் பார்க்க

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

கடந்த மாதம் மின்னணு அலுவலக அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிற துறைகளிலிருந்து வரும் கைமுறையிலான கோப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தில்லி அரசின் நிதித் துறை அறிவித்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்க... மேலும் பார்க்க

வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்... மேலும் பார்க்க