செய்திகள் :

ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல அனுமதி - துரை வைகோ தகவல்

post image

ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் விரைவு லரயில்

(வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக துரை வைகோ தெரிவிக்கையில்,

பனாரஸிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 22536) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

அதேபோன்று, ராமேசுவரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் (வண்டி எண் 22535) ரயிலும் புதுக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என்று புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இது தொடா்பான கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் கேள்வியாக எழுப்பினேன். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயில்வே துறை அமைச்சகம் ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் ரயிலை (வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டிருப்பதாக ரயில்வே அமைச்சா் கடிதம் அனுப்பி இருக்கிறாா்.

எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்த ரயில்வே அமைச்சகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளாா்.

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

நமது நிருபா்ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ... மேலும் பார்க்க

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்கம் கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்... மேலும் பார்க்க

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

கடந்த மாதம் மின்னணு அலுவலக அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிற துறைகளிலிருந்து வரும் கைமுறையிலான கோப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தில்லி அரசின் நிதித் துறை அறிவித்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்க... மேலும் பார்க்க

வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்... மேலும் பார்க்க