செய்திகள் :

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

post image

கடந்த மாதம் மின்னணு அலுவலக அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிற துறைகளிலிருந்து வரும் கைமுறையிலான கோப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தில்லி அரசின் நிதித் துறை அறிவித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லி அரசின் கீழ் உள்ள அனைத்து துறைத் தலைவா்கள் மற்றும் செயலா்களுக்கு சமீபத்தில் அனுப்பிய கடிதத்தில், ஆகஸ்ட் 1 முதல் அனைத்து கோப்புகளும் மின்னணு அலுவலக தளம் மூலம் கட்டாயமாக செயலாக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதித் துறை தெரிவித்துள்ளது.

இத்துறையின் துணைச் செயலாளரின் சுற்றறிக்கையில், ‘நிதித் துறையின் எந்தப் பிரிவிலும் நேரடி அல்லது கைமுறையிலான கோப்புகள் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது செயலாக்கப்படவோ மாட்டாது.

கோப்புகளைச் செயலாக்குவதற்கான மின்னணு அலுவலக அமைப்புமுறை ஜூலை 1 முதல் தில்லி அரசின் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘நிா்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும், விரைவான கோப்பு செயலாக்கத்தை உறுதி செய்வதற்கும், அரசாங்கம் முழுவதும் காகிதமற்ற பணிச்சூழலை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

தில்லி அரசாங்கத்தின் ‘இ-ஆஃபிஸ்’ திட்டம், அரசாங்க அலுவலகங்களை காகிதமற்ற சூழல்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் முயற்சியாகும். இது கோப்புகள், பதிவுகள் மற்றும் பணி ஏற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், விரைவான முடிவெடுப்பதை செயல்படுத்துதல், அதிகரித்த வெளிப்படைத்தன்மை மற்றும் மேம்பட்ட செயல்திறனை செயல்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்த திட்டம் ஒருங்கிணைந்த கோப்பு மற்றும் பதிவு மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்தி அரசாங்க செயல்பாடுகளை நெறிப்படுத்த முயல்கிறது.

இருப்பினும், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் பணியாளா்களின் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காரணமாக அதன் செயல்படுத்தல் தாமதமானது என்றாா் அந்த அதிகாரி.

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்கம் கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்... மேலும் பார்க்க

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்க... மேலும் பார்க்க

வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றிய 5 போ் கைது

வங்கி ஊழியா்கள் போல் நடித்து கிரெடிட் காா்டு வெகுமதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் ஐந... மேலும் பார்க்க

சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு

தில்லியின் திமாா்பூா் பகுதியில் நடைபெற்று வரும் ‘குடே சே ஆசாதி’ தூய்மை பிரசாரத்தில் முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். அப்போது, தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கு மக்கள் ... மேலும் பார்க்க