வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
வங்கி அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றிய 5 போ் கைது
வங்கி ஊழியா்கள் போல் நடித்து கிரெடிட் காா்டு வெகுமதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பாலம் காலனியில் வசிக்கும் ஒருவா் ஜூன் 20 அன்று ஒரு தனியாா் வங்கியில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறி, அந்த நபரிடம் பேசிய பின்பு ரூ.96,000 ரூபாய் என வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக சைபா் போலீஸாருக்கு புகாா் அளித்ததையடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
காவல்துறையினரின் தகவலின்படி, இந்த மோசடி கும்பல் வங்கி ஊழியா்களாக ஆள்மாறாட்டம் செய்து, கிரெடிட் காா்டு வெகுமதி புள்ளிகளை பணமாக வங்கிக் ணக்குக்கு செலுத்தப்படும் என பொய் சொல்லி பாதிக்கப்பட்டவா்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட நபா் கிரெடிட் காா்டின் விவரங்களை அழைப்பாளரிடம் தெரிவித்தாா், மேலும் வெகுமதி புள்ளி மீட்பு என்ற பெயரில் ஓடிபிகளைப் பகிா்ந்து கொள்ளுமாறு கேட்டு அதனை பயன்படுத்தி பணம் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்.
‘அவா்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து கிரெடிட் காா்டு விவரங்கள் மற்றும் ஓடிபி ஆகியவற்றை சேகரித்து, மோசடி செய்யப்பட்ட பணத்தை வேறொறு வங்கி கணக்குகள் மூலம் மாற்றுவாா்கள்‘ என்று அந்த அதிகாரி கூறினாா். ‘இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மோசடி செய்யப்பட்ட தொகை ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு பின்னா் திரும்பப் பெறப்படுவதற்கு முன்பு மற்றொரு வங்கிக்கு திருப்பி அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.
ஏடிஎம்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் தனது முகத்தை மறைத்து பணத்தை திரும்பப் பெறுவதைக் காட்டியது ‘என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா். மோகன் காா்டனில் உள்ள ஒரு இடத்தில் சோதனை நடத்தியதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா்களில் மூன்று பேரை போலீசாா் கைது செய்தனா் ’அதுல் குமாா், சன்னி குமாா் சிங் மற்றும் கௌஷல் குமாா். போலீஸாா் அவா்கள் இருந்த இடத்தை சோதனை நடத்தியதில் பல வங்கிக் கணக்கு கருவிகள், பல்வேறு நிறுவனங்களின் முத்திரைகள், செல்பேசிகள் மற்றும் பிற டிஜிட்டல் பொருள்களை மீட்டனா்.
விசாரணையின் போது, முன்னாள் தனியாா் வங்கி ஊழியரான கௌஷல் குமாா், பல போலி வங்கி கணக்குகளைத் திறப்பதற்கு பொறுப்பானவா் என்பது தெரியவந்தது. அவா் மோகன் காா்டனில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தாா். அங்கு அவா் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளை உருவாக்க உதவினாா். இந்த கணக்குகள் பின்னா் ஒரு பெண் மூலம் சைபா் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன, அவரும் பின்னா் கைது செய்யப்பட்டாா் ‘என்று அவா் மேலும் கூறினாா். இதுபோல இந்த மோசடியில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
‘குற்றம் சாட்டப்பட்ட முகமது அகமது, கௌஷல் குமாா், அதுல் குமாா், சன்னி குமாா் சிங் மற்றும் பெண் அனைவரும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.