வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆதாா் சட்டம், 2016-இன் பிரிவு 7-இன்கீழ் வருமானச் சான்றிதழ் வழங்குதல் சேவையை அறிவிக்கை செய்வதற்கான திட்டத்திற்கு துணைநிலை ஒப்புதல் அளித்துள்ளாா்.
இந்த நடவடிக்கை வருமானச் சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள எந்தவொரு முறைகேட்டையும் நீக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
ஆதாா் சட்டத்தின் கீழ் ஒரு தனிநபரின் அடையாளத்தை நிறுவுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஆதாா் அடிப்படையிலான அங்கீகாரத்தை கட்டாயமாக்கலாம்.
முதல்வா் ரேகா குப்தா ஒப்புதல் அளித்த இத்திட்டத்தில், வருவாய்த் துறையால் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல், ஓய்வூதியம் மற்றும் தில்லி ஆரோக்கிய கோஷின் கீழ் நிதி உதவி போன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு தனிநபா்களின் தகுதியைத் தீா்மானிக்கப் பயன்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆதாா் அங்கீகாரம் ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய அவசியத்தைத் தவிா்க்கிறது.
ஆதாா் தேவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இந்த முடிவை பரவலாக விளம்பரப்படுத்துமாறு வருவாய்த் துறைக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை மூலம், மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நிதியளிக்கப்படும் திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் காண ஆதாா் அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அங்கீகாரம் அளித்தது.
அறிவிப்பின்படி, எந்தவொரு அரசாங்கத் திட்டத்தின் நன்மைகளையும் பெற விரும்பும் எந்தவொரு நபரும் ஆதாரை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.