செய்திகள் :

நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை முன் ஆஜர்; என்ன காரணம்?

post image

ஆன்லைன் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஹைதராபாத்தின் பஷீர்பாக் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, விஜய் தேவரகொண்டாவின் வாக்குமூலங்கள் ஏற்கெனவே இவ்வழக்கில் விசாரிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் கிடைக்கப்பெற்ற ஆவணங்களுடன் ஒப்பீடு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜ்

சில பிரபலங்களும், சமூக ஊடக பிரபலங்களும் பணம் பெற்றுக்கொண்டு, சூதாட்ட நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில், விளம்பரங்களில் பங்கேற்றதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

இதற்கு முன்னதாக, நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த ஜூலை 30 ஆம் தேதி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விசாரணைக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் 2016 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும், தான் எந்தப் பணமும் பெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்ட சில பிரபலங்கள் ஒத்துழைத்து வர, மற்றவர்கள் கால அவகாசம் கோரியுள்ளனர். நடிகர் ராணா தகுபதி, ஜூலை 23 ஆம் தேதி ஆஜராக கூறிய நிலையில், வேறு தேதியை அவர் கேட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்

நடிகை மஞ்சு லட்சுமி ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளார்.

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

இதில் நடிகர்கள், யூடியூபர்கள், இன்புளுயன்சர்கள் உள்ளிட்ட பலர் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். இந்த விளம்பரங்கள் குறித்து அமலாக்கத்துறை தற்போது ஆராய்ந்து வருகிறது.

குஜராத்: லிவ் இன் உறவில் வாழ்ந்த இளம்பெண் மர்ம மரணம்: ஆணவக்கொலை செய்து எரித்ததாக 9 பேர் கைது!

குஜராத் மாநிலம், பனஸ்காந்தா என்ற இடத்தை சேர்ந்த சந்திரிகா(18) என்ற பெண் ஹரேஷ் செளதரி என்பவருடன் கடந்த சில மாதங்களாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்காக ஒப்பந்தமும் செய்து கொண்டனர். ஆன... மேலும் பார்க்க

திருப்பூர் SI கொலை: "எங்கே இருக்கிறது சட்ட ஒழுங்கு?" - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் கா... மேலும் பார்க்க

Tirupur SSI Murder: `குற்றவாளிகள் செய்த கொடூம்; 6 தனிப்படைகள் தேடுதல்' - சம்பவம் குறித்து ஐஜி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க

``இது லாக்கப் மரணம் இல்லை'' நேற்று இரவு நடந்தது என்ன? - கோவை காவல் ஆணையர் விளக்கம்

சிவகங்கை காவல் கஸ்டடியில் இருந்த அஜித்குமாரை, காவல்துறையினர் கடுமையாக தாக்கியத்தில் உயிரிழந்தார். இதேபோல கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ம... மேலும் பார்க்க

குமரி: ஹோட்டலில் QR Code-ஐ மாற்றி ரூ.14 லட்சம் மோசடி - ஊழியரையும், உறவினர் பெண்ணையும் தேடும் போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பீச்ரோடு சந்திப்பை சேர்ந்தவர் ஆஸ்டின் ( 48). இவர் அந்த பகுதியில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்த க்யூ.ஆர் கோடு... மேலும் பார்க்க

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல்; 30 லட்சம் நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்

திருப்பூர் உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்தி... மேலும் பார்க்க