செய்திகள் :

காஸாவின் கோரம்! பசி மரணங்கள் 200-யை எட்டியது! இதில் 90 பேர் குழந்தைகள்!!

post image

காஸாவில் உணவின்றி பசியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-யை எட்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் உடனான காஸா போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.

தங்கள் நாட்டு பணயக் கைதிகளை மீட்கும்பொருட்டு இஸ்ரேல், காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தற்போது காஸாவில் உணவின்றி பசி, பட்டினியால் குழந்தைகள் உள்பட மக்கள் அனைவரும் செத்துக் கொண்டிருக்கின்றனர். மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க மறுக்கும் இஸ்ரேலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதையும் படிக்க | காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் கொள்ளை போகின்றன! - ஐ.நா தகவல்

இந்நிலையில் காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு, உணவு இல்லாமல் பசியில் பலரும் செத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை 200-யை எட்டியுள்ளதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பசி, பட்டினியால் 193 பேர் இறந்துள்ளனர். இதில் 96 பேர் குழந்தைகள். கடந்த 24 மணி நேரத்தில் பசியால் 5 பேர் இறந்துள்ளதாகக் கூறியுள்ளது.

காஸாவிற்கு வழங்கப்பட்டு வரும் உணவு மிகவும் குறைவானது, அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை என்று ஐ.நா. தொடர்ந்து கூறி வருகிறது.

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய லாரிகள் இடையிலே வழிமறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல காஸாவில் தண்ணீர், மருந்து பொருள்கள், குழந்தைகளுக்கான இன்குபேட்டர் வசதி பற்றாக்குறை நிலவுகிறது. காயங்களுக்கான மருந்துகள் காலியாகிவிட்டதாக காஸாவில் உள்ள குவைத் மருத்துவமனை இன்று கூறியுள்ளது. அங்கு ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன.

Gaza’s Health Ministry says latest count pushed the total number of hunger-related deaths to 193, including 96 children.

இதையும் படிக்க | பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்... மேலும் பார்க்க

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டதில், 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்டோங் மாகாணத்தில், பெய்த கனமழையால், பையூன் மாவட்டத்தில் இன்று (ஆக.6) காலை 8.3... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மேலும் 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலை செய்யக்கோரி நாடு தழுவிய 2 -ம் கட்ட போராட்டம், அந்நாட்டின் சுதந்திர நாளான ஆக.14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அந்நாட்டு ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அ... மேலும் பார்க்க

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரஷியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒலிம்பிக்ஸ் 2028 குறித்து விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க