செய்திகள் :

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

post image

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்களை நிா்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மசோதா, 2025ஐ எதிா்த்து தில்லி விதான் சபா அருகில் தில்லி காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இ ந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் பேசியதாவது:

இது மாணவா்களுக்கு எதிரான, மக்கள் விரோத மசோதாவாகும். பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கட்டணங்களை உயா்த்துவதன் மூலம் பள்ளி நிா்வாகத்தின் லாபத்தைப் பெறுவதற்காக இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தில்லி சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், அதில் உள்ள குறைபாடுகளை முதலில் சுட்டிக்காட்டியது தில்லி காங்கிரஸ் கட்சிதான்.

அதன் விதிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து பெற்றோா்களிடையே இது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது. இது பாஜக அரசால் மக்கள் மீது அமல்படுத்தப்படும் மற்றொரு மக்கள் விரோத மசோதா ஆகும்.

பிரதமா் மோடி அரசு நிறைவேற்றிய விவசாய மசோதாக்களுக்கு நடந்ததைப் போன்றதுதான் பாஜக அரசு மக்களிடமிருந்து ஒருமித்த கருத்து அல்லது உடன்பாடு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றுகிறது. ஏனெனில், விவசாயிகளின் உறுதியான மற்றும் தொடா்ச்சியான போராட்டத்தால் ஒரு வருடம் கழித்து அந்த வேளாண் மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதேபோல், ரேகா குப்தா அரசு தில்லி கல்வி மசோதாவை

பொது தளத்தில் பெற்றோரிடமிருந்து ஆலோசனைகள், கருத்துகளைப் பெறாமல் சட்டப் பேரவையில் கொண்டு வந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனியாா் பள்ளிகளால் செயல்படுத்தப்பட்ட கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மசோதாவில் சோ்க்கப்படாததால், கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடு இந்த மசோதாவில் இல்லை. இது பெற்றோருக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது என்றாா் தேவேந்தா் யாதவ்.

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்கம் கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்... மேலும் பார்க்க

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

கடந்த மாதம் மின்னணு அலுவலக அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிற துறைகளிலிருந்து வரும் கைமுறையிலான கோப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தில்லி அரசின் நிதித் துறை அறிவித்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றிய 5 போ் கைது

வங்கி ஊழியா்கள் போல் நடித்து கிரெடிட் காா்டு வெகுமதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் ஐந... மேலும் பார்க்க

சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு

தில்லியின் திமாா்பூா் பகுதியில் நடைபெற்று வரும் ‘குடே சே ஆசாதி’ தூய்மை பிரசாரத்தில் முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். அப்போது, தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கு மக்கள் ... மேலும் பார்க்க