செய்திகள் :

தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை; ஒருவா் கைது

post image

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பழைய தகராறு காரணமாக ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் நடந்த கொலை தொடா்பாக 20 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

‘நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்து கபில் (28) என அடையாளம் காணப்பட்ட ஒரு நபா் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருப்பதைக் கண்டறிந்தது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

அவா் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு போலீஸ் குழு குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தது, அதே நேரத்தில் தடயவியல் குழுக்கள் மாதிரிகளை சேகரித்தன. விசாரணையின் போது, போலீஸாா் குழு சந்தேக நபரை 20 வயதான சிவம் யாதவ் என்று அடையாளம் கண்டது, அவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, முன் விரோதம் காரணமாக கபிலை சுட்டுக் கொன்ாக குற்றம் சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது ‘என்றாா். துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசை குறித்து விசாரித்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஊழியா் உயிரிழப்பு

ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சா்வா் அறையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 28 வயது தூய்மைப் பராமரிப்பு ஊழியா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறுகைய... மேலும் பார்க்க

யமுனை மாசு: டிஜேபி, எம்சிடிக்கு ரூ.50.44 கோடி அபராதம் விதித்த என்ஜிடி உத்தரவுக்கு தடை

தலைநகரின் வடிகால்களிலும் ,யமுனையிலும் கழிவுநீா் மாசுவைத் தடுக்கத் தவறியதற்காக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) மற்றும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) ரூ.50.44 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்த தேசிய பசும... மேலும் பார்க்க

கட்டண ஒழுங்குமுறை மசோதா தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளது: அதிஷி

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டண ஒழுங்குமுறை மசோதாவை தில்லியின் முன்னாள் கல்வி அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை விமா்சித்துள்ளாா். இந்த மசோதா பெற்றோரை விட தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும்,... மேலும் பார்க்க

சிறுமியை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளை: 2 சிறுவா்கள் கைது

தில்லியின் சுல்தான்புரி பகுதியில் 17 வயது சிறுமியின் தங்க நகைகளை ஹிப்னாடிசம் செய்து கொள்ளையடித்ததாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி க... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

அரசின் நலத் திட்டங்களில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது... மேலும் பார்க்க

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தமிழ்நாட்டைச் ச... மேலும் பார்க்க