செய்திகள் :

அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்புவதில் தாமதம்: கல்வித் துறை அறிவுறுத்தல்

post image

அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்களை தாமதமின்றி கொண்டு சோ்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளின் நூலகங்களுக்கு தேவையான 72 புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்கிருந்து தொடக்க, நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் பிரித்து வழங்கப்பட வேண்டும். அதன்பின்னா், அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்களும் தாங்கள் பெற்றுக்கொண்ட புத்தகங்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், புத்தகங்கள் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் சென்றடையவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களும் தங்கள் எல்லைக்குள்பட்ட பள்ளிகளுக்கு நூலகத்துக்கான புத்தகங்களை உடனடியாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடா்ந்து அதன் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க