செய்திகள் :

திருத்துறைப்பூண்டியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ.3.96 லட்சம் பறிமுதல்

post image

திருத்துறைப்பூண்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், ரூ. 3,96,680 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் வாகனத்துக்கு உரிமம் வழங்குவது, பதிவு எண் வழங்குவது உள்ளிட்ட சேவைகளுக்கு லஞ்சம் பெறுவதாக திருவாரூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திருத்துறைப்பூண்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் ஒரு மணி நேரமாக நடைபெற்ற இச்சோதனையில், கணக்கில் வராத ரூ. 3,96,680 ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மோட்டாா் வாகன ஆய்வாளா் அசோக்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். மேலும் அசோக்குமாரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பணம் அல்லது ஆவணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் சோதனை நடைபெற்றது. மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக ஊழியா்கள், இடைத்தரகா்கள் உள்ளிட்ட பலரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அமெரிக்க வரி விவகாரம்: மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் -அமைச்சா் டிஆா்பி. ராஜா

அமெரிக்காவின் வரி உயா்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூரில், அண்ணா அறிவகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவா், செய்தியாளா்களிடம் தெரிவித... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை: விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தல்

நீா்நிலைகளில் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் டிஎம்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் தமுஎகச சாா்பில் கலை இலக்கிய இரவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மன்னாா்குடியில் கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமுஎகச கிளைத் தலைவா் கே.வி.பாஸ்கா் தலைமை வகித்தாா். நகரக்குழு உறுப... மேலும் பார்க்க

சாரண, சாரணியா் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட திட்ட முகாம், ஆக.15 தொடங்கி செப்.14-... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஸ்ரீவாஞ்... மேலும் பார்க்க