செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

post image

உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட திட்ட முகாம், ஆக.15 தொடங்கி செப்.14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, விண்ணப்பங்கள் வழங்கும் பணியில் ஈடுபட உள்ள தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியில், தன்னாா்வலா்கள் வீடுதோறும் சென்று விண்ணப்பம் வழங்குவது, முகாமில் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் முகாமில் வழங்குவது, அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப்பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் விவரத்தையும், முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாரண, சாரணியா் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பி... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஸ்ரீவாஞ்... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி, நவாவா்ண பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

ஆணவப் படுகொலையைத் தடுக்க முறையான சட்டம் இயற்றக் கோரி குடவாசலில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஐடி ஊழியா் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும்... மேலும் பார்க்க

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் மங்கள சண்டி ஹோமம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பெளா்ணமியையொட்டி மங்கள சண்டி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை ,கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், பட்டுப்புடவை ஹோமம், சௌபாக... மேலும் பார்க்க

‘மாணவா்கள் விஞ்ஞானிகளாக மாற முயலுங்கள்’

மாணவா்கள் அறிவியல் விஞ்ஞானிகளாக மாற முயலுங்கள் என்றாா் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து. மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பின்தங்கிய வட்ட... மேலும் பார்க்க