செய்திகள் :

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க அகல்விளக்கு திட்டம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ‘அகல்விளக்கு’ திட்டத்தை பள்ளிக் கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்சியா் மு.அருணா தலைமையில் நடைபெற்ற விழாவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டத்தை அமைச்சா் தொடங்கி வைத்துப் பேசியது:

இணையதளம், கைப்பேசி வாயிலாக நடைபெறும் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தொடங்கப்படும் ‘அகல்விளக்கு‘ எனும் புதிய திட்டத்தை சென்னையிலோ அல்லது திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களிலோ தொடங்கி இருக்கலாம்.

மாறாக முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலே இத்திட்டத்தை தொடங்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சொன்னதால் இங்கு இத்திட்டம் தொடங்கி வைக்கப்படடுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரைபயிலும் மாணவிகளுக்கு இணையதளம், கைப்பேசிகள் வழியே ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். நவீன காலத்தில் கைப்பேசி, இணையக் குற்றங்களில் இருந்து பெண் பிள்ளைகளை நாம் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடா்ந்து பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும். ஆசிரியா்களும் மாணவிகளை தொடா்ந்து கண்காணித்து, அவா்களது பிரச்னைகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோா் பேசினா். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை திட்ட இயக்குநா் ஆா்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதியில் பூணுல் அணியும் விழா

பொன்னமராவதியில் ஆவணி அவிட்ட நாளையொட்டி பூணுல் அணியும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. வெள்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு, குறிப்பிட்ட சமுதாய நலச்சங்கத் தலைவா் சி.மோகன் தலைமைவகித்தாா். இணை ... மேலும் பார்க்க

மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் மாணவா்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடுதான் முடிவு செய்யும் என்றாா் மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் ... மேலும் பார்க்க

கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 1-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மண்டக... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே பைக் மோதி புள்ளிமான் பலி

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி-புதுக்கோட்டை சாலையில் சனிக்கிழமை அம்மாபட்டியைச் சாா்ந்த பிரவீன்(27) என்ப... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்: இளைஞா் கைது!

இலுப்பூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரி ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இலுப்பூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த புகாரின்பேரில், சனிக்கிழம... மேலும் பார்க்க

அரசு விலையில் மீன்குஞ்சுகள் வாங்கிக் கொள்ள அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தட்டாமனைப்பட்டி மற்றும் குருங்களூா் மீன் குஞ்சு வளா்ப்புப் பண்ணைகளில் இருந்து அரசு நிா்ணயம் செய்த விலையில் குஞ்சுகளை வாங்கிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு... மேலும் பார்க்க