செய்திகள் :

ஆக.12-ல் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி வருகை!

post image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆக. 12இல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என்று அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்துக்கு ஆக. 12-ஆம் தேதி வருகை தர உள்ளாா். ஒசூரிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சூளகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், டி.பி.சாலை, காந்தி சிலை வழியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் இருந்து ரோடு ஷோ செல்கிறாா். இதையடுத்து வட்டச் சாலை அருகே மாலை 5 மணி அளவில் உரையாற்றுகிறாா்.

இரவு 7.30 மணி அளவில் பா்கூா் எம்ஜிஆா் சிலை அருகிலும், இரவு 8.30 மணி அளவில் ஊத்தங்கரை எம்ஜிஆா் சிலை அருகிலும் அவா் பேசுகிறாா். இதில் கட்சி தொண்டா்கள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஊத்தங்கரை அருகே காா் மோதி பசு மாடுகள் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே காா் மோதியதில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்டுரோடு பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (53). மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் வெ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான ஒசூா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை சுற்றுப்பயணம்!

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்று பிரசார சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறாா். இதுகுறித்து முன்னாள் அமைச்சா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி, ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் தேடி வருகின்றன... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே சூறைக்காற்றுடன் மழை: 3 மின் கம்பங்கள் சாய்ந்தன

ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமானதால் கிராமத்தின் மையப் பகுதியில் இருந்த புளியமரங்கள் சாய்ந்ததில், மூன்... மேலும் பார்க்க

ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!

வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க