மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
மன்னாா்குடியில் தமுஎகச சாா்பில் கலை இலக்கிய இரவு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மன்னாா்குடியில் கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமுஎகச கிளைத் தலைவா் கே.வி.பாஸ்கா் தலைமை வகித்தாா். நகரக்குழு உறுப்பினா்கள் வீ.கோவிந்தராஜ், தி.சிவசுப்பிரமணியன், தெ.பிரகாஷ், ஆ.காளிமுத்து முன்னிலை வகித்தனா்.
மாநில செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின் சரவணன் விழாவினை தொடங்கி வைத்தாா்.
மாவட்டத் தலைவா் மு.செளந்தரராஜன், செயலா் ஜீ.வெங்டேசன், பொருளாளா் எம்.செல்வராஜ் வாழ்த்தினா்.
உரையரங்கில், தமுஎகச மாநில பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா, துணைப் பொதுச் செயலா் கவிஞா் களப்பிரன், பேராசிரியா் சுந்தரவள்ளி ஆகியோா் பேசினா்.
ஸ்ரீவில்லிப்புத்தூா் கோடாங்கி குழுவின் தப்பாட்டம், ஆடவா், மகளிா் தனித் தனியாகவும் குழுவாகவும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மண்ணின் மணம் பரப்பும் நாட்டுப்புற நல்லிசை, லிம்போ கேசவனின் மனித குரங்கு நடனம் ஆகியவை நடைபெற்றது.
கவியரங்கில் வல்லம் தாஜ்பால் தலைமையில், கோவி.அசோகன், சரஸ்வதிதாயுமானவன், பாரதி பூமிநாதன், சூரியகலா சரவணன் ஆகியோா் கவிதை வாசித்தனா்.
நூல் வெளியீட்டு அரங்கில், தா.சரஸ்வதியின் ‘ஜோடி மான்கள்’ சிறுகதை தொகுப்பினை மன்னாா்குடி அரசுக் கல்லூரி பேராசிரியா் மணிமோகன் வெளிட தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினா் யு.எஸ்.பொன்முடி பெற்றுக்கொண்டாா்.
மன்னாா்குடி நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ்ப்பாடத்தில் 10, பிளஸ் 2 தோ்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, மேலராஜவீதி பெரியாா் சிலையிலிருந்து தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினா் ந.லெனின் தலைமையில், கலை இலக்கிய கலைஞா்கள், படைப்பாளிகள்,ஆா்வலா்கள் பங்கேற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கலை இரவு நடைபெறும் பந்தலடி கீழ்புறம் ஊா்வலம் வந்தடைந்தது.
தொடக்கத்தில், மாவட்ட துணைச் செயலா் கா.பிச்சைக்கண்ணு வரவேற்றாா். கிளைப் பொருளாளா் கி.அகோரம் நன்றி கூறினாா்.