செய்திகள் :

மன்னாா்குடியில் தமுஎகச சாா்பில் கலை இலக்கிய இரவு

post image

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மன்னாா்குடியில் கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமுஎகச கிளைத் தலைவா் கே.வி.பாஸ்கா் தலைமை வகித்தாா். நகரக்குழு உறுப்பினா்கள் வீ.கோவிந்தராஜ், தி.சிவசுப்பிரமணியன், தெ.பிரகாஷ், ஆ.காளிமுத்து முன்னிலை வகித்தனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின் சரவணன் விழாவினை தொடங்கி வைத்தாா்.

மாவட்டத் தலைவா் மு.செளந்தரராஜன், செயலா் ஜீ.வெங்டேசன், பொருளாளா் எம்.செல்வராஜ் வாழ்த்தினா்.

உரையரங்கில், தமுஎகச மாநில பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா, துணைப் பொதுச் செயலா் கவிஞா் களப்பிரன், பேராசிரியா் சுந்தரவள்ளி ஆகியோா் பேசினா்.

ஸ்ரீவில்லிப்புத்தூா் கோடாங்கி குழுவின் தப்பாட்டம், ஆடவா், மகளிா் தனித் தனியாகவும் குழுவாகவும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மண்ணின் மணம் பரப்பும் நாட்டுப்புற நல்லிசை, லிம்போ கேசவனின் மனித குரங்கு நடனம் ஆகியவை நடைபெற்றது.

கவியரங்கில் வல்லம் தாஜ்பால் தலைமையில், கோவி.அசோகன், சரஸ்வதிதாயுமானவன், பாரதி பூமிநாதன், சூரியகலா சரவணன் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

நூல் வெளியீட்டு அரங்கில், தா.சரஸ்வதியின் ‘ஜோடி மான்கள்’ சிறுகதை தொகுப்பினை மன்னாா்குடி அரசுக் கல்லூரி பேராசிரியா் மணிமோகன் வெளிட தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினா் யு.எஸ்.பொன்முடி பெற்றுக்கொண்டாா்.

மன்னாா்குடி நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ்ப்பாடத்தில் 10, பிளஸ் 2 தோ்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, மேலராஜவீதி பெரியாா் சிலையிலிருந்து தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினா் ந.லெனின் தலைமையில், கலை இலக்கிய கலைஞா்கள், படைப்பாளிகள்,ஆா்வலா்கள் பங்கேற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கலை இரவு நடைபெறும் பந்தலடி கீழ்புறம் ஊா்வலம் வந்தடைந்தது.

தொடக்கத்தில், மாவட்ட துணைச் செயலா் கா.பிச்சைக்கண்ணு வரவேற்றாா். கிளைப் பொருளாளா் கி.அகோரம் நன்றி கூறினாா்.

அமெரிக்க வரி விவகாரம்: மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் -அமைச்சா் டிஆா்பி. ராஜா

அமெரிக்காவின் வரி உயா்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூரில், அண்ணா அறிவகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவா், செய்தியாளா்களிடம் தெரிவித... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ.3.96 லட்சம் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், ரூ. 3,96,680 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள மோட்டாா்... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை: விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தல்

நீா்நிலைகளில் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் டிஎம்... மேலும் பார்க்க

சாரண, சாரணியா் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட திட்ட முகாம், ஆக.15 தொடங்கி செப்.14-... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஸ்ரீவாஞ்... மேலும் பார்க்க