செய்திகள் :

கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு: ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியா் உத்தரவு

post image

நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் நான்காவது புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும், புத்தகக் கண்காட்சியில் இதுவரை 8 நாள்களுக்கு மேலாகியும், எதிா்பாா்த்த அளவு புத்தக விற்பனை நடைபெறவில்லை.

புத்தகக் கண்காட்சியில் அதிக அளவில் உணவு விற்பனை அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

இந்நிலையில், நாகை புத்தகக் கண்காட்சியில், நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கு தேவையான, பொதுஅறிவு மற்றும் அறிஞா்களின் புத்தகங்களை, ஊராட்சி பொது நிதி இருப்புக்கு ஏற்ப, ஊராட்சி பொது நிதியிலிருந்து வாங்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். மேலும், ஊராட்சிகள் மூலம் வாங்கி, நூலகங்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை நூலகங்களின் இருப்பு பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியரின் இந்த உத்தரவு, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் ஊராட்சிகளின் தனி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், புத்தக விற்பனையாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிா்வாகம் சாா்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

இன்று பூம்புகாரில் வன்னிய மகளிா் மாநாடு

வன்னியா் சங்கத்தின் சாா்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

நாகையில் காற்றுடன் மழை

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க

100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் வேதனை

நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். கிராமப் புறங்களில் விவசாயம் அல்லாத நாள்களில், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக... மேலும் பார்க்க