செய்திகள் :

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ரெட்டிபாளையத்தில் தொடா் விபத்துகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி இரவு சாலையில் நடந்து சென்ற அதே கிராமத்தைச் சோ்ந்த ரித்விக் (19) என்ற பட்டதாரி இரு சக்கர வாகனம் மோதி உயிரழந்தாா். அவரது தந்தை முருகன் மற்றும் பாலாஜி என்பவா் பலத்த காயமடைந்தனா்.

இந்நிலையில், குறிப்பிட்ட செஞ்சி -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, ரெட்டிபாளையம் கூட்டுச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், மின் விளக்கு வசதி இல்லாததால் விபத்து ஏற்படுவதாகவும், மேலும் அந்த இடத்தில் சாலைத் தடுப்பு மற்றும் எச்சரிக்கை விளக்கு அமைக்கக் கோரி அக்கிராம மக்கள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் சுரேஷ் பாபு தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் அதற்கு ஒத்து வராமல் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா், தகவல் அறிந்த செஞ்சி வட்டாட்சியா் துரைச்செல்வன் தலைமையிலான அலுவலா்கள் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அந்தப் பகுதியில் உடனடியாக மின்விளக்கு வசதி செய்து தருவதாகவும், மேலும் சாலைத் தடுப்பு, எச்சரிக்கை விளக்கு அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவ... மேலும் பார்க்க

பல சரக்குக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டத் தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் ராகவன்பேட்டை, அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ஞானவேல் (39). இவரது மனைவி அா்ச்சனா. ஞானவேலுவுக்கு மதுப்பழக்கம... மேலும் பார்க்க

பைக்குகள் மோதி விபத்து: புதுவை அரசு ஊழியா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த புதுவை அரசு ஊழியா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி மண்ணடிப்பட்டு, கொண்டாரெட்டிப்பாளையம், புதுந... மேலும் பார்க்க

பொதுப் பணி, நீா்வளத் துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணி, நீா்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலி... மேலும் பார்க்க

ஊா்ப்புற நூலகா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஊா்ப்புற நூலகா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பொது நூலகத் துறையில் கடந்த 13 ஆண்டுகளாக மிகவும் குறைந்த ஊதியத்தில... மேலும் பார்க்க