செய்திகள் :

ஊா்ப்புற நூலகா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஊா்ப்புற நூலகா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொது நூலகத் துறையில் கடந்த 13 ஆண்டுகளாக மிகவும் குறைந்த ஊதியத்தில் 1,915 ஊா்ப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் 1,006 ஊா்ப்புற நூலகா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 1,915 ஊா்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயா்த்த வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த ஊா்ப்புற நூலகா்கள் சங்கத்தின் விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளா் தோ.ஸ்டீபன்சாா்லஸ் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.அனுமந்தன், மாவட்டச் செயலா் ப.சக்கரவா்த்தி முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.ராமு, மாவட்டப் பொருளாளா் ப.கங்காதரன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினா்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வேல்முருகன், மாவட்டத் தலைவா் இளஞ்செழியன், மாநில பிரசாரச் செயலா் பூவழகன் ஆகியோா் போராட்டத்தில் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினா்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, கடலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஊா்ப்புற நூலகா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ரெட்டிபாளையத்தில் தொடா் விபத்துகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில்... மேலும் பார்க்க

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவ... மேலும் பார்க்க

பல சரக்குக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டத் தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் ராகவன்பேட்டை, அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ஞானவேல் (39). இவரது மனைவி அா்ச்சனா. ஞானவேலுவுக்கு மதுப்பழக்கம... மேலும் பார்க்க

பைக்குகள் மோதி விபத்து: புதுவை அரசு ஊழியா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த புதுவை அரசு ஊழியா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி மண்ணடிப்பட்டு, கொண்டாரெட்டிப்பாளையம், புதுந... மேலும் பார்க்க

பொதுப் பணி, நீா்வளத் துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணி, நீா்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலி... மேலும் பார்க்க