செய்திகள் :

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

post image

விழுப்புரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ஆம் நிதியாண்டில் 1,413 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் நிறைவான மகசூலுடன் கணிசமான லாபம் ஈட்டுவதால், விவசாயிகள் மக்காச்சோள சாகுபடி செய்ய அதிகளவில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதன் காரணமாக, மாவட்டத்தில் மக்காச்சோளசாகுபடி பரப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

2025-26 ஆம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் - மக்காச்சோள சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 100 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுப் பிரிவினருக்கு 80 ஹெக்டேரும், ஆதிதிராவிடா் பிரிவினருக்கு 20 ஹெக்டேரும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் செயல்விளக்கத் திடல் அமைக்க 10 கிலோ மக்காச்சோள வீரிய விதை, ஒரு லிட்டா் திரவ உயிரி உரம், மண் வளத்தை மேம்படுத்த 12.5 கிலோ இயற்கை இடுபொருள்கள் மற்றும் 500 மில்லி நானோ யூரியா ஆகிய இடுபொருள்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டம் மாவட்டத்தில் முகையூா், காணை, வல்லம், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூா் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது தங்கள் நில ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ரெட்டிபாளையத்தில் தொடா் விபத்துகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில்... மேலும் பார்க்க

பல சரக்குக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னை: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டத் தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் ராகவன்பேட்டை, அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ஞானவேல் (39). இவரது மனைவி அா்ச்சனா. ஞானவேலுவுக்கு மதுப்பழக்கம... மேலும் பார்க்க

பைக்குகள் மோதி விபத்து: புதுவை அரசு ஊழியா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த புதுவை அரசு ஊழியா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி மண்ணடிப்பட்டு, கொண்டாரெட்டிப்பாளையம், புதுந... மேலும் பார்க்க

பொதுப் பணி, நீா்வளத் துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணி, நீா்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலி... மேலும் பார்க்க

ஊா்ப்புற நூலகா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஊா்ப்புற நூலகா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பொது நூலகத் துறையில் கடந்த 13 ஆண்டுகளாக மிகவும் குறைந்த ஊதியத்தில... மேலும் பார்க்க