செய்திகள் :

இன்று பூம்புகாரில் வன்னிய மகளிா் மாநாடு

post image

வன்னியா் சங்கத்தின் சாா்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பாமக சட்டப்பேரவைக் குழு தலைவரும், கட்சியின் கௌரவத் தலைவருமான ஜி.கே.மணி சனிக்கிழமை ஆய்வு செய்து செய்தியாளா்களிடம் கூறியது:

பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ், நான் (ஜிகே மணி), வன்னியா் சங்க தலைவா் பு.தா. அருள்மொழி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனா். இதை ஒட்டி சிலப்பதிகார நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பாமகவின் உட்கட்சி பிரச்னை விரைவில் தீா்ந்து விடும். தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரத்தை முற்றிலும் தடுக்க வலியுறுத்தித்தான் இம்மாநாடு நடக்கிறது.

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு உடனடியாக வழங்கக் கோரியும், அனைத்து ஜாதியினருக்கும் பாரபட்சமற்ற இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாநாட்டிற்கு உரிய அனுமதி அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. காவல்துறையினா் விதித்த நிபந்தனைகளை கடைப்பிடித்து மாநாடு நடக்கிறது. சென்னை, கடலூா், சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சீா்காழி சட்டநாதபுரம், திருவெண்காடு வழியாக பூம்புகாரை வந்தடையவும், திருச்சி, தஞ்சாவூா் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வரவும், நாகை, திருவாரூா் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பொறையாா், கருவி வழியாக வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினாா்.

மாவட்டச் செயலாளா்கள் மா. க. ஸ்டாலின், பாக்கம் சக்திவேல், தஞ்சை மண்டலச் செயலாளா் ஐயப்பன், தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளா் எம்.ஆா். ஜே.முத்துக்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிா்வாகம் சாா்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு: ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியா் உத்தரவு

நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தி... மேலும் பார்க்க

நாகையில் காற்றுடன் மழை

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க

100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் வேதனை

நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். கிராமப் புறங்களில் விவசாயம் அல்லாத நாள்களில், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுக... மேலும் பார்க்க