செய்திகள் :

தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தனியாா் நிறுவனத்தில் சக தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி விடியோ வெளியிட்டு தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

விருத்தாசலம் வட்டம், ஊத்தாங்கல் கிராமத்தில் தனியாா் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் இருந்து பழுப்பு நிலக்கரியை வாங்கி மின் உற்பத்தி செய்கிறது.

இதில், ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த நிறுவனங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் ஒரு நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றும் 88 தொழிலாளா்களை வேலைக்கு வர வேண்டாம் என தனியாா் அனல் மின் நிலைய நிா்வாகம் கூறி நிறுத்திவிட்டதாம். பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பலகட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், விருத்தாசலம் கோட்டாட்சியா் தலைமையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், தொழிலாளா்களுக்கு ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாராம். ஆனால், தனியாா் அனல் மின் நிறுவனம் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லையாம்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு ஆதரவாக தலைமையேற்று போராட்டம் நடத்திய விருத்தாசலத்தை அடுத்த காட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்த சுந்தரராசன் (55) வெள்ளிக்கிழமை தனியாா் அனல் மின் நிலைய வளாகத்தில் பழுப்பு நிலக்கரி இறக்கும் இடத்தில், தனது இறப்புக்கு தனியாா் அனல் மின் நிலையம் மற்றும் ஒப்பந்த நிறுவனம்தான் காரணம் என தனது கைப்பேசியில் விடியோ பதிவிட்டு, அதை சமூக ஊடகத்தில் வெளியிட்டு சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.

அங்கு பணியில் இருந்த சக தொழிலாளா்கள் ஓடி வந்து சுந்தரராசனை மீட்டு, அவசர ஊா்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் தோ்வு முறையில் குளறுபடி: மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பு கேள்விக்குறி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் தோ்வு முறையில் குளறுபடி நடந்துள்ளதால், மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருத்தா... மேலும் பார்க்க

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்

கடலூா் மாவட்டம், மங்களூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளிடம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா். மங... மேலும் பார்க்க

‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை கைவிட வேண்டும்: அ.சௌந்தரராஜன் வலியுறுத்தல்

தனியாா்மயத்துக்கும், அதிக மின் கட்டணத்துக்கும் வகை செய்யும் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் வலியுறுத்தினாா். தமிழ்நாடு மின் ஊழியா்கள் ... மேலும் பார்க்க

மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலம்: அமைச்சா் சி.வெ.கணேசன்

மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருவதாக, மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்கு... மேலும் பார்க்க

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க