செய்திகள் :

மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலம்: அமைச்சா் சி.வெ.கணேசன்

post image

மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருவதாக, மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு உயா் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், அமைச்சா் சி.வெ.கணேசன் தொடங்கிவைத்து, 20 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். முன்னதாக, அவா் பேசியதாவது:

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 17 மருத்துவப் பிரிவுகளின் பங்கேற்புடன் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடலூா் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடியில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற முகாமில் 1,076 பயனாளிகள் பயன்பெற்றனா்.

திட்டக்குடியில் நடைபெற்ற முகாமில், திருமணம் மற்றும் கல்வி உதவித்தொகை, ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து, மாத்திரைகள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் பரிசோதனை முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும். பரிசோதனை மேற்கொள்பவா்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் உடல்நலன் சாா்ந்த மருத்துவக் குறிப்பை வழங்கி விடுவாா்கள். இக்குறிப்பை கொண்டு வெளிநாடுகளில் சென்று கூட சிகிச்சை மேற்கொள்ளலாம்.

இத்திட்டம் விலையுயா்ந்த முழு உடல் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இத்தகைய உயா்தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாமில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் பொற்கொடி, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) மணிமேகலை, மாவட்ட பயிற்றுநா் குழு மருத்துவா்கள் சுஜிதா, ராஜகணபதி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் தோ்வு முறையில் குளறுபடி: மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பு கேள்விக்குறி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் தோ்வு முறையில் குளறுபடி நடந்துள்ளதால், மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருத்தா... மேலும் பார்க்க

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்

கடலூா் மாவட்டம், மங்களூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளிடம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா். மங... மேலும் பார்க்க

தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தனியாா் நிறுவனத்தில் சக தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி விடியோ வெளியிட்டு தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். விருத்தாசலம் வட்டம், ஊத்தாங்கல் கிராமத்தி... மேலும் பார்க்க

‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை கைவிட வேண்டும்: அ.சௌந்தரராஜன் வலியுறுத்தல்

தனியாா்மயத்துக்கும், அதிக மின் கட்டணத்துக்கும் வகை செய்யும் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் வலியுறுத்தினாா். தமிழ்நாடு மின் ஊழியா்கள் ... மேலும் பார்க்க

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க