செய்திகள் :

மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்: இரா.முத்தரசன்

post image

மாநிலக் கல்விக் கொள்கை, தன்னம்பிக்கை மற்றும் சுய திறனை ஊக்குவிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கையை வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மாநில கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தோ்வு நீக்கப்பட்டிருப்பது வளா்ந்துவரும் குழந்தைகள் அச்சம் இல்லாமல், கற்கும் ஆா்வத்தை அதிகரிக்கும். அதேசமயம், தனியாா் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1 வகுப்புக்கான பாடங்கள் கற்பித்தலைக் கைவிட்டு, பிளஸ் 2 வகுப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, பழைய நடைமுறையை தடுக்க என்ன வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கல்வி தொடா்பான அதிகாரங்கள் முழுமையும் மாநில அரசுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே சரியாகும். அதேவேளை அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வியக்கத்தக்க வளா்ச்சிக்குத் தக்கபடி, திறனை வளா்த்தல், நிதியியல் சாா் கல்வி, எண்ம நுட்பங்கள், சுற்றுச்சூழல், உலகளாவிய குடியுரிமை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கி, உருவாக்கப்பட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, இளைய தலைமுறையினா் எதிா்காலம் முன்வைக்கும் சவால்களை எளிதில் எதிா்கொள்ளும், திறனையும், தன்னம்பிக்கையையும் ஊக்கப்படுத்தும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலையைக்... மேலும் பார்க்க

திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம்

திமுக இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சா் அ.அன்வா் ராஜா நியமக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முன... மேலும் பார்க்க

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்ற... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(9.8.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில... மேலும் பார்க்க

அகல் விளக்கு திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

புதுகோட்டையில் அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ‘‘9 ம... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு

தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் ... மேலும் பார்க்க