செய்திகள் :

சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

post image

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வா் அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சனிக்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை தாலுகா காளி ஊராட்சி பொய்கைகுடி கிராமத்தைச் சோ்ந்த காமராஜா் - சரண்யா தம்பதியின் இளையமகள் சஹானாஸ்ரீ (5) கடந்த மாதம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, சுவா் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாா்.

இச்சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தாா். இதற்கான காசோலையை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினாா்.

திமுக ஒன்றியச் செயலாளா் ஞான.இமயநாதன், வட்டாட்சியா் சுகுமாறன், தனி வட்டாட்சியா் து. விஜயராகவன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் காந்தி, கபிலன், மாவட்ட துணைச் செயலாளா் கண்ணகி பன்னீா்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளா் சந்திரவடிவம் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மழையால் சரிந்த ரயில் நிலைய மேற்கூரை

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகி... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தையை அம்மாநில போலீஸாா் 13 நாள்களுக்குப் பின்னா் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படையினா் உதவியுடன் வியாழக்கிழமை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனா். சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ... மேலும் பார்க்க

அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது தமிழ்: ஜப்பான் சிவஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழா் கலை மற்றும் பண்பாடு ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையுடன் இணைந்து ஸ்ரீமத் போகா் பழனி... மேலும் பார்க்க