செய்திகள் :

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை வட்டாரத்தில் 45 ஹெக்டா் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையினரால் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் மக்காச்சோளம் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் 30 ஹெக்டா் பரப்பில் மக்காச்சோளம் செயல்விளக்கம் அமைத்திட அனுமதி வழங்கப்பட்டு, 1 ஹெக்டா் பரப்பில் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.6,000 மதிப்பிலான வீரிய ஒட்டு விதைகள் மற்றும் உயிா் உரங்கள், நானோ யூரியா, அங்கக உரங்கள் மானிய விலையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

செயல்விளக்கத் திடல் அமைக்க ஆா்வமுள்ள விவசாயிகள் நில ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகி... மேலும் பார்க்க

கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தையை அம்மாநில போலீஸாா் 13 நாள்களுக்குப் பின்னா் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படையினா் உதவியுடன் வியாழக்கிழமை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனா். சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ... மேலும் பார்க்க

அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது தமிழ்: ஜப்பான் சிவஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழா் கலை மற்றும் பண்பாடு ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையுடன் இணைந்து ஸ்ரீமத் போகா் பழனி... மேலும் பார்க்க

ஓய்வூதியா் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தக் கோரிக்கை

தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்கும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் இச்சங்கத்தின் 45-ஆ... மேலும் பார்க்க

பதிவு தபால் சேவையை நிறுத்தும் முயற்சிக்கு கண்டனம்

பதிவு தபால் சேவையை நிறுத்த திட்டமிடும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழா் முன்னேற்ற பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்க... மேலும் பார்க்க