செய்திகள் :

ஓய்வூதியா் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தக் கோரிக்கை

post image

தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்கும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் இச்சங்கத்தின் 45-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆண்டு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கோவி.சுந்தரராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா். ஜெயக்குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் க. அறிவழகன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

மாவட்ட இணைச் செயலாளா் ஜி. ராமச்சந்திரன் தீா்மானங்களை முன்மொழிந்தாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் ந. மாணிக்கம், மாநில பொதுச் செயலாளா் க. முத்துக்குமரவேலு, மாநில துணைத் தலைவா் ந. ராசகோபாலன் உள்ளிட்ட மாநில நிா்வாகிகள் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு பேசினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மாநிலத் தலைவா் ந. மாணிக்கம் கூறியது:

ஓய்வு பெற்ற அலுவலா்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். 2021 சட்டப்பேரவை தோ்தலின்போது திமுக அறிவித்தவாறு 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம், 10 சதவீத கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்குவதைப் போன்று ரூ.1,000 மருத்துவப் படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆகியவற்றை தமிழக அரசும் வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், 22 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, மாவட்டச் செயலாளா் கே. அறிவழகன் நன்றி கூறினாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகி... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தையை அம்மாநில போலீஸாா் 13 நாள்களுக்குப் பின்னா் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படையினா் உதவியுடன் வியாழக்கிழமை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனா். சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ... மேலும் பார்க்க

அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது தமிழ்: ஜப்பான் சிவஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழா் கலை மற்றும் பண்பாடு ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையுடன் இணைந்து ஸ்ரீமத் போகா் பழனி... மேலும் பார்க்க

பதிவு தபால் சேவையை நிறுத்தும் முயற்சிக்கு கண்டனம்

பதிவு தபால் சேவையை நிறுத்த திட்டமிடும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழா் முன்னேற்ற பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்க... மேலும் பார்க்க