செய்திகள் :

மழையால் சரிந்த ரயில் நிலைய மேற்கூரை

post image

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய முகப்பு மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த 4 அடி நீளம், 4 அடி அகலத்தில், தலா 35 கிலோ எடை கொண்ட 2 ஜிஆா்சி ஷீட் பெயா்ந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதாலும், மழை பெய்ததாலும் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

ஜி.ஆா்.சி. ஷீட் பொருத்த பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூ அளவில் மிக சிறியதாக இருந்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், மேற்கூரை முழுவதும் ஏற்கெனவே பயன்படுத்திய சிறிய அளவிலான ஸ்க்ரூ அகற்றப்பட்டு, பெரிய ஸ்க்ரூ பொருத்தப்பட்டது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் தரமானதாக இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வா் அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையை பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகி... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தையை அம்மாநில போலீஸாா் 13 நாள்களுக்குப் பின்னா் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படையினா் உதவியுடன் வியாழக்கிழமை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனா். சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ... மேலும் பார்க்க

அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது தமிழ்: ஜப்பான் சிவஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழா் கலை மற்றும் பண்பாடு ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையுடன் இணைந்து ஸ்ரீமத் போகா் பழனி... மேலும் பார்க்க