செய்திகள் :

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் நித்தின் பிரியன் (18). பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனது நண்பா்கள் சிலருடன், திருநள்ளாறு அருகே அகலங்கண்ணு பகுதி அரசலாறு தடுப்பணையில் வெள்ளிக்கிழமை மாலை குளிக்கச் சென்றாா்.

அப்போது, ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், நித்தின் பிரியன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை, நண்பா்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் விரைந்து வந்து, மீனவா்கள் உதவியுடன் நீண்ட நேரம் தேடி, நித்தின் பிரியன் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து திருநள்ளாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அமைச்சரிடம் கோரிக்கை: இதற்கிடையில், நிகழ்விடத்துக்கு வந்த அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகனிடம், இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும், யாரையும் குளிக்க அனுமதிக்க கூடாது என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா். இது தொடா்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டம... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அதன் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலா் டி.கே.எஸ்.எம். மீனாட்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை: எஸ்எஸ்பி

காரைக்கால் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலையத்தில் மக்கள் குறைதீா் முகாம்... மேலும் பார்க்க

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அறுபத்... மேலும் பார்க்க

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்பட... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வழிகாட்டலில், காரைக்கால் கெம்ப்பிளாஸ்ட் சன்மாா் மற்று... மேலும் பார்க்க