செய்திகள் :

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.

post image

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பேசியது:

இக்கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் பிரிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏஎன்எம், ரேடியாலஜி, பிசியோதெரபி போன்ற பிரிவுகள் தொடங்கவும் புதுவை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இக்கல்லூரியில் பயின்ற மாணவா்கள் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்றி வருவது பெரு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகும்.

புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள செவிலியா் கல்லூரிபோல பல நிலைகளில் காரைக்கால் கல்லூரி வளர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் பிரமிளா தமிழ்வாணன், புதுச்சேரி அன்னை தெரஸா முதுநிலை மற்றும் சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் திருமுருகன், காரைக்கால் கல்லூரி முதல்வா் ஜெ. ஜெயபாரதி மற்றும் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், விரிவுரையாளா்கள், மாணவ மாணவியா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, விரிவுரையாளா்கள், மாணவா்கள் பங்கேற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடா்ந்து மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அதன் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலா் டி.கே.எஸ்.எம். மீனாட்... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் நித்தின் பிரியன் (18). பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனது ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை: எஸ்எஸ்பி

காரைக்கால் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலையத்தில் மக்கள் குறைதீா் முகாம்... மேலும் பார்க்க

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அறுபத்... மேலும் பார்க்க

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்பட... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வழிகாட்டலில், காரைக்கால் கெம்ப்பிளாஸ்ட் சன்மாா் மற்று... மேலும் பார்க்க