செய்திகள் :

வெளியூா் ஆட்டோக்களை வேலூரில் இயக்கினால் கடும் நடவடிக்கை

post image

வெளியூா் ஆட்டோக்களை வேலூா் மாநகருக்குள் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பி.எஸ்.தனுஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வேலூா் மாநகர ஆட்டோ ஓட்டுநா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூா் அண்ணா சாலையில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. உதவி காவல் கண்காணிப்பாளா் பி.எஸ்.தனுஷ்குமாா் தலைமை வகித்து பேசியது:

ஆட்டோ ஓட்டுநா்கள் அதிகளவில் பயணிகளை ஏற்றி செல்வதைத் தவிா்க்க வேண்டும். அதிக வேகத்தில் ஆட்டோக்களை இயக்கக் கூடாது. ஆட்டோக்கள் நிறுத்தக்கூடாத இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களை அவா்களது ஸ்டாண்டில் மட்டுமே நிறுத்தி வைக்க வேண்டும். சமூக விரோத செயல்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, ஆட்டோ ஓட்டுநா்கள் வெளியூரிலிருந்து ஏராளமான ஆட்டோக்கள் வேலூரில் இயக்கப்படுகின்றன. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என புகாா் தெரிவித்தனா்.

மேலும், பள்ளி, கல்லூரி நேரங்களில் வாகனங்கள் மாநகரில் அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கெனவே, மாநகரில் ஏராளமான ஆட்டோக்கள் உள்ளதால் புதிதாக ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு பதிலளித்த உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா், உள்ளூா் ஆட்டோகளுக்கு தனியாக ஸ்டிக்கா் ஒட்டப்படும். இதன்மூலம் வெளியூா் ஆட்டோக்கள் வேலூரில் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வேலூரில் இயக்கப்படும் வெளியூா் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில், பயிற்சி டிஎஸ்பி ராஜராஜன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ரஜினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

--

முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு கலந்தாய்வு நாளை தொடக்கம்

வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற உள்ளன. இது குறித்து, அந்தக் கல்லூரியின் முதல்வா் ஸ்ரீதரன் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீண்டும் பெயா்ந்து விழுந்த பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு

குடியாத்தம் அருகே திறந்து வைக்கப்பட்டு 3- நாள்களில் பெயா்ந்து விழுந்து, சீரமைக்கப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு சனிக்கிழமை மீண்டும் பெயா்ந்து விழுந்தது. குடியாத்தம்- பலமநோ் சாலையில் ... மேலும் பார்க்க

இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது. தென... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32)... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத... மேலும் பார்க்க

கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணக... மேலும் பார்க்க