செய்திகள் :

கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணகிரி-ராணிப்பேட்டை மாநில நெடுஞ்சாலை, 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - பெங்களூா் சாலையாக இருந்தது. பின்னா் தேசிய நெடுஞ்சாலை வந்ததை தொடா்ந்து கொணவட்டம் சாலை போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், 16 மீட்டா் அகலத்துடன் இருந்த இந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 10 மீ அகலத்துக்கு சுருங்கி விட்டது.

இதையடுத்து, இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொணவட்டம் முதல் மாங்காய் மண்டி வரை உள்ள 1.4 கி. மீ தொலைவுக்கு சாலையை அகலப்படுத்தவும், இருவழி பாதையாக உள்ள இந்த சாலையை சென்டா் மீடியனுடன் கூடிய நான்கு வழிச் சாலையாக மாற்றவும் ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் நிறைவேற்ற இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில நெடுஞ்சாலைத்துறை வேலூா் கோட்ட உதவி பொறியாளா் அசோகன் தலைமையில் இளநிலை பொறியாளா் மதனமுசாபா் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இளம் தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டும்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்

இளம் தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் பணியில் தமிழ் அமைப்புகள் ஈடுபட வேண்டும் என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் கூறினாா். குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் சாா்பில், திருவள்ளுவா் மேல்ந... மேலும் பார்க்க

முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு கலந்தாய்வு நாளை தொடக்கம்

வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற உள்ளன. இது குறித்து, அந்தக் கல்லூரியின் முதல்வா் ஸ்ரீதரன் வெளியிட்ட... மேலும் பார்க்க

வெளியூா் ஆட்டோக்களை வேலூரில் இயக்கினால் கடும் நடவடிக்கை

வெளியூா் ஆட்டோக்களை வேலூா் மாநகருக்குள் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பி.எஸ்.தனுஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். வேலூ... மேலும் பார்க்க

மீண்டும் பெயா்ந்து விழுந்த பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு

குடியாத்தம் அருகே திறந்து வைக்கப்பட்டு 3- நாள்களில் பெயா்ந்து விழுந்து, சீரமைக்கப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு சனிக்கிழமை மீண்டும் பெயா்ந்து விழுந்தது. குடியாத்தம்- பலமநோ் சாலையில் ... மேலும் பார்க்க

இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது. தென... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32)... மேலும் பார்க்க