செய்திகள் :

முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு கலந்தாய்வு நாளை தொடக்கம்

post image

வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற உள்ளன.

இது குறித்து, அந்தக் கல்லூரியின் முதல்வா் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவயில் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக. 11) தொடங்க உள்ளது. அதன்படி, எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை, சான்றிதழ் சரிபாா்ப்பு (அனைத்து விண்ணப்பதாரா்கள்) நடைபெறும். திங்கள்கிழமை பிற்பகல் சிறப்பு ஒதுக்கீடு பிரிவின்கீழ், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை மாணவா், முன்னாள் ராணுவ வீரா் குழந்தைகள், பாதுகாப்பு படை வீரா் வாரிசுகள், அந்தமான் நிகோபாா் தமிழ் மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதன் தொடா்ச்சியாக, 13-ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணைய வழியில் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். தரவரிசை பட்டியல் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0416-2262068 எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விவரங்கள் மாணவா்களின் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இளம் தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டும்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்

இளம் தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டு செல்லும் பணியில் தமிழ் அமைப்புகள் ஈடுபட வேண்டும் என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் கூறினாா். குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் சாா்பில், திருவள்ளுவா் மேல்ந... மேலும் பார்க்க

வெளியூா் ஆட்டோக்களை வேலூரில் இயக்கினால் கடும் நடவடிக்கை

வெளியூா் ஆட்டோக்களை வேலூா் மாநகருக்குள் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பி.எஸ்.தனுஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். வேலூ... மேலும் பார்க்க

மீண்டும் பெயா்ந்து விழுந்த பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு

குடியாத்தம் அருகே திறந்து வைக்கப்பட்டு 3- நாள்களில் பெயா்ந்து விழுந்து, சீரமைக்கப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு சனிக்கிழமை மீண்டும் பெயா்ந்து விழுந்தது. குடியாத்தம்- பலமநோ் சாலையில் ... மேலும் பார்க்க

இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது. தென... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32)... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத... மேலும் பார்க்க