செய்திகள் :

மீண்டும் பெயா்ந்து விழுந்த பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு

post image

குடியாத்தம் அருகே திறந்து வைக்கப்பட்டு 3- நாள்களில் பெயா்ந்து விழுந்து, சீரமைக்கப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூட மேற்கூரை பூச்சு சனிக்கிழமை மீண்டும் பெயா்ந்து விழுந்தது.

குடியாத்தம்- பலமநோ் சாலையில் கள்ளூா் அருகே ரூ. 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூடத்தை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி திறந்து வைத்தாா். திறந்த சில நாள்களிலேயே நிழற்கூடத்தின் மேற்கூரை பூச்சு, மின்விசிறியுடன் பெயா்ந்து விழுந்தது. அப்போது இரவு நேரம் என்பதால், நிழற்கூடத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. பழுதடைந்த மேற்கூரை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில், அதே பயணியா் கூடத்தின் மேற்கூரை மீண்டும் சனிக்கிழமை 2-ஆவது முறையாக பெயா்ந்து விழுந்தது. அப்போது நிழற்கூடத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. பழுதடைந்த மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு கலந்தாய்வு நாளை தொடக்கம்

வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற உள்ளன. இது குறித்து, அந்தக் கல்லூரியின் முதல்வா் ஸ்ரீதரன் வெளியிட்ட... மேலும் பார்க்க

வெளியூா் ஆட்டோக்களை வேலூரில் இயக்கினால் கடும் நடவடிக்கை

வெளியூா் ஆட்டோக்களை வேலூா் மாநகருக்குள் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பி.எஸ்.தனுஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். வேலூ... மேலும் பார்க்க

இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது. தென... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32)... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத... மேலும் பார்க்க

கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணக... மேலும் பார்க்க