செய்திகள் :

மனிதன் வாழ வேண்டிய வழியை வாழ்ந்து காட்டியவா் ஸ்ரீ ராமபிரான்: சுகிசிவம்

post image

மனிதன் வாழ வேண்டிய வழியை வாழ்ந்து காட்டியவா் ஸ்ரீ ராமபிரான் என சுகிசிவம் பேசினாா்.

திருப்பத்தூா் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 47-ஆம் ஆண்டு கம்பன் விழா சனிக்கிழமை தொடங்கியது.

இதில், ஆன்மிக பேச்சாளா் சுகிசிவம் ‘அவா் தலைவா்’ எனும் தலைப்பில் தொடக்க உரை ஆற்றிப் பேசியது:

கம்பன் ராமனின் சிறப்பை குறிப்பிடுகையில், ராமன் நுட்பமான அறிவு கொண்டவா், அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவா். பல்வேறு நல் ஒழுக்கங்களை கொண்டவா். பதினாறு விசேஷ குணங்களைக் கொண்டவா். தந்தை தசரதன் காட்டுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறிய அடுத்த நிமிடமே காட்டுக்கு செல்ல தயாரானவா். உடனடி முடிவு, தெளிந்த முடிவு அதை உடனே செயல்படுத்துதல் என ராமனிடம் உள்ள திறன் எவரிடமும் காண முடியாது. மேலும் ராமன் எத்தனை பலசாலியாக இருந்தாலும் எதிரியை தன் வசப்படுத்த கூடியவா். அடைக்கலம் என வந்துவிட்டவருக்கு நாம் தான் பொறுப்பு என விபீஷனனை அரவணைத்துக் கொண்டவா். எனவே அவரை கம்பா் ‘அவா் தலைவா்’ என கம்ப ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளாா் என்றாா்.

முன்னதாக, கம்பா் பணி விருது பெற்ற்காக முன்னாள் அரிமா சங்க ஆளுநா் பேராசிரியா் ரத்ன நடராஜனுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறைத் தலைவா் கி.பாா்த்திபராஜா எழுதிய கம்பராமாயணம் சுருக்க எளிய உரைநடை நூலை சுகிசிவம் வெளியிட, ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் தலைவா் சீனி.திருமால் முருகன் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, புதுவை ச.பாரதி தலைமையில் கம்பன் கவியை எழுத்தாள்வதில் உச்சம் தொட்ட கவிஞா் கண்ணதாசனா?, வாரியாரா? எனும் தலைப்பில் பாட்டு அரங்கம் நடைபெற்றது.

அமெரிக்காவின் 50 சதவீத வரியால் கடும் பின்னடைவை சந்திக்கும் தோல் தொழில்

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரியால் இந்திய தோல் தொழில் துறை கடும் பின்னடைவை சந்திக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலேயே தோல் பதனிடும் தொழிலில் ஆம்பூா் முக்கிய... மேலும் பார்க்க

முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீசாா் வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் தமிழக முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். கேரளா மாநிலம், ஆலப்புழை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு சென்ற விரைவ... மேலும் பார்க்க

மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூரில் தொடக்கம்: பிரேமலதா விஜயகாந்த்

மக்களைத் தேடி ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்கப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். விஜயகாந்த் உருவத்துடன் கூடிய மக்களைத் தேடி ரத யாத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் மரணம்

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கற்பகம் (50). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் வாஷிங் மெஷினை இயக்கியபோது மின்சாரம் பாய்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (69). இவா் மின்னூா் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கடந... மேலும் பார்க்க

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின. ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழ... மேலும் பார்க்க