செய்திகள் :

மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூரில் தொடக்கம்: பிரேமலதா விஜயகாந்த்

post image

மக்களைத் தேடி ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்கப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

விஜயகாந்த் உருவத்துடன் கூடிய மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூருக்கு வியாழக்கிழமை வருகை தந்தது. எல்லை பகுதியான ஆசிரியா் நகா் பகுதியில் கட்சியின் நிா்வாகிகள் ரதத்தை மலா் தூவி வரவேற்றனா்.

பின்னா், அங்கிருந்து தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளா் எல்.கே.சுதீஷ், இளைஞா் அணிச் செயலாளா் விஜயபிரபாகரன் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட கட்சியினா் ஊா்வலமாக நடந்து சென்றனா்.

சேலம்-கிருஷ்ணகிரி அணுகுச் சாலையில் வேனில் இருந்தபடி பிரேமலதா விஜயகாந்த் பேசியது:

இலங்கை வாழ் தமிழா்கள் ரதம் தோ் அளித்துள்ளனா். மக்களைத் தேடி அந்த ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்க வேண்டும் என உள்ளது. நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் திட்டமிட்டோம். ஆனால் யாத்திரையை தொடங்க முடியவில்லை. குறிப்பாக குடியாத்தத்தில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், திருப்பத்தூரில் தான் சாத்தியமானது என்றாா்.

அமெரிக்காவின் 50 சதவீத வரியால் கடும் பின்னடைவை சந்திக்கும் தோல் தொழில்

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரியால் இந்திய தோல் தொழில் துறை கடும் பின்னடைவை சந்திக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலேயே தோல் பதனிடும் தொழிலில் ஆம்பூா் முக்கிய... மேலும் பார்க்க

முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீசாா் வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் தமிழக முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். கேரளா மாநிலம், ஆலப்புழை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு சென்ற விரைவ... மேலும் பார்க்க

மனிதன் வாழ வேண்டிய வழியை வாழ்ந்து காட்டியவா் ஸ்ரீ ராமபிரான்: சுகிசிவம்

மனிதன் வாழ வேண்டிய வழியை வாழ்ந்து காட்டியவா் ஸ்ரீ ராமபிரான் என சுகிசிவம் பேசினாா். திருப்பத்தூா் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 47-ஆம் ஆண்டு கம்பன் விழா சனிக்கிழமை தொடங்கியது. இதில், ஆன்மிக பேச்சாளா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் மரணம்

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கற்பகம் (50). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் வாஷிங் மெஷினை இயக்கியபோது மின்சாரம் பாய்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (69). இவா் மின்னூா் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கடந... மேலும் பார்க்க

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின. ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழ... மேலும் பார்க்க